ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் படைகளில் இணைந்து செயற்படுவதற்காக இலங்கை இராணுவத்தின் 12 ஆவது பாதுகாப்பு படையணியினர் இன்றுகாலை லெபனான் நோக்கி பயணித்துள்ளனர்.

உயர்மட்ட அதிகாரிகளும் 14 ஏனைய தரநிலை அதிகாரிகள் உட்பட மொத்தமாக 150 பேர் இந்த படையணியில் உள்ளடங்குவதாக இராணுவ ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது. ஏற்கனவே, 10 அதிகாரிகள் உட்பட்ட 140 பேர் அமைதிகாக்கும் பணிகளுக்காக லெபனானுக்கு சென்றுள்ள நிலையில், எதிர்வரும் மார்ச் மாதம் ஆறாம் திகதி மற்றுமொரு குழு லெபனானுக்கு பயணிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.