Header image alt text

திருகோணமலை, நிலாவெளிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாம்பல்தீவுப் பகுதியில், வீட்டு உரிமையாளருக்கும் வீட்டில் வாடகைக்கு இருந்தவருக்குமிடையில் இடம்பெற்ற வாக்குவாதத்தில், வீட்டு உரிமையாளர் கத்திக் குத்துக்கு இலக்காகி, இன்று காலை உயிரிழந்துள்ளாரென, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்தவர், சாம்பல்தீவு, 06ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த கணகசிங்கம் கேதீஸ்வரன் (41 வயது) என கூறப்படுகின்றது. சாம்பல்தீவு பாடசாலைக்கருகில் இருக்கின்ற வீட்டை வாடகைக்குக் கொடுத்து விட்டு, வாடகைப் பணத்தை வாங்குவதற்காகச் சென்றபோது, வீட்டில் வாடகைக்கு இருந்தவருடன் தார்க்கம் ஏற்பட்டதையடுத்து, வீட்டு உரிமையாளர் கத்திக்குத்துக்கு இலக்காகியுள்ளார். Read more

ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வை யின் 37 ஆவது கூட்டத் தொடர் எதிர்வரும் 26ஆம் திகதி முதல் மார்ச் மாதம் 23ஆம் திக­தி­வரை நடை­பெ­ற­வுள்ள நிலையில் 26 ஆம் திகதி திங்­கட்­கி­ழமை முதல்நாள் அமர்வில் ஐக்கிய நாடுகள் செய­லாளர் நாயகம் அன்­டோ­னியோ கட்ரஸ் மற்றும் ஐ.நா. மனித உரிமை ஆணை­யாளர் செய்ட் அல் ஹ_சேன் ஆகியோர் உரை­யாற்­ற­வுள்­ளனர். இதன்­போது இவர்கள் இரு­வரும் இலங்கை தொடர்பில் சில விட­யங்­களை முன்­வைப்­பார்கள் என்று தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

இம்­முறை கூட்டத் தொடரில் இலங்கை தொடர்­பான இரண்டு விவா­தங்கள் நடை­பெ­ற­வுள்­ள­துடன் இலங்கை குறித்து பல்­வேறு அறிக்­கை­களும் தாக்கல் செய்­யப்­ப­ட­வுள்­ளன. Read more

நாட்டில் தற்போது ஆட்சியில் இருக்கும் தேசிய அரசாங்கத்தை விட்டு விலகிக் கொள்ள சிறீலங்கா சுதந்திரக்கட்சியினர் தீர்மானித்துள்ளார்கள்.

அதன்படி ஒரு புதிய பிரதமரை நியமிப்பதில் ஜனாதிபதி உயர் நீதிமன்றத்தின் கருத்தை பெற வேண்டியுள்ளதாக சிறீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற பிரதி சபாநாயகரும் அமைச்சருமான திலங்க சுமதிபால நேற்றிரவு தெரிவித்துள்ளார். அதேபோல், தேசிய அரசாங்கத்திலிருந்து விலகும் முடிவைத் தெரியப்படுத்தியுள்ளதாக, சுதந்திரக் கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான மஹிந்த அமரவீரவும் தெரிவித்துள்ளார். Read more

உள்ளூராட்சி மன்றங்களுக்குத் தெரிவாகியுள்ள உறுப்பினர்களுக்கு, ஏனைய சலுகைகள் எதனையும் வழங்காது, மாதாந்தக் கொடுப்பனவாக, 15 ஆயிரம் ரூபாயை மாத்திரம் வழங்குவதற்கு மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, மோட்டார் சைக்கிள், தொலைபேசிக் கொடுப்பனவு, தொலைநகல் (பெக்ஸ்) இயந்திரங்கள் போன்றவை வழங்கப்படமாட்டாது என, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் கமல் பத்மசிறி தெரிவித்துள்ளார். Read more

போலி கனேடிய கடவுச்சீட்டினை பயன்படுத்தி கனடா செல்ல முயற்சித்த இலங்கையர் ஒருவர் நாடு கடத்தப்பட்டுள்ளார். கட்டார் விமான நிலையம் ஊடாக கனடா செல்ல முயற்சித்த குறித்த இலங்கையர் விமானநிலைய அதிகாரிகளால் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளார்.

நாடு கடத்தப்பட்ட இலங்கையரை கட்டுநாயக்க விமான நிலையத்தில் குற்ற விசாரணை திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர் மினுவாங்கொட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றத்தின் பதில் நீதவான் உத்தரவிட்டுள்ளார். Read more

அகில இலங்கை இந்து மாமன்றத்தின் தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி கந்தையா நீலகண்டன் தனது 70 ஆவது வயதில் இன்று காலமானார்.

கொழும்பிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் இன்றையதினம் பிற்பகல் காலமானதாக அகில இலங்கை இந்து மாமன்றம் தெரிவித்துள்ளது.

ஈரான் நாட்டின் தலைநகர் டெஹ்ரான் நகரிலிருந்து யசூச் நகருக்கு சென்ற பயணிகள் விமானம் நொறுங்கி விபத்துக்குள்ளானதில் 66 பேர் பலியானதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

டெஹ்ரானில் இருந்து இஸ்ஃபாஹன் மாகாணத்தில் உள்ள யசூச் நகரத்திற்கு இன்றுகாலை பயணிகள் விமானம் ஒன்று புறப்பட்டுச் சென்றது. இந்த விமானம் ஏசெமன் விமான நிறுவனத்தின் ATR-72 என்ற அந்த விமானத்தில் 66 பயணிகள் இருந்ததாக கூறப்படுகிறது. வானில் பறந்து கொண்டிருக்கும்போதே ரேடாரில் இருந்து விமானம் மாயமாகியுள்ளது. Read more

இலங்கையுடன் சுதந்திர வர்த்தக உடன்படிக்கையில் கைச்சாத்திடுவது குறித்து தாய்லாந்து அரசாங்கம் ஆர்வத்துடன் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாய்லாந்து அரசாங்க தகவல்கள் இதனை தெரிவித்துள்ளன. தெற்காசியாவில் இலங்கை முக்கிய பொருளாதார மையமாக திகழ்கிறது. அத்துடன் கடந்த காலங்களில் இலங்கையின் பொருளாதாரம் ஆரோக்கிய நிலையில் இருந்து வந்துள்ளதாகவும் அந்த தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது. Read more

சீன முதலீடுகளுக்கும், முதலீட்டுத் திட்டங்களுக்கும் முனைப்புடன் ஆதரவு வழங்க இலங்கை அரசாங்கம் உறுதியளித்துள்ளதாக சீன நாளிதழான சைனா டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் சீன தூதுவர் இற்கும் இடையில் நேற்று இடம்பெற்ற சந்திப்பில் ஜனாதிபதி இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளதாக அந்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது. ஹம்பாந்தோட்டை துறைமுகம், தொழில் வலயங்கள் உள்ளிட்ட சீன முதலீடுகளுக்கு அரசாங்கம் முழுமையான ஆதரவை வழங்கும் என அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார். Read more

மாகா­ண­சபைத் தேர்­தல்­களை எதிர்­வரும் செப்­டெம்பர் மாதம் நடத்த உத்­தே­சிக்­கப்­பட்­டுள்­ளது என்றும் அதற்­கான ஏற்­பா­டுகள் எதிர்­வரும் மே மாத­ம­ளவில் ஆரம்­பிக்­கப்­படும் எனவும் தேர்­தல்கள் ஆணைக்­கு­ழுவின் தலைவர் மஹிந்த தேசப்­பி­ரிய தெரி­வித்­துள்ளார்.

இதே­வேளை, நடை­பெற்று முடிந்த உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­த­லின்­போது, ஏதேனும் அர­சியல் கட்சி அல்­லது வேட்­பா­ளர்கள், பணம், பொருட்கள் அல்­லது வேறேதும் பெறு­ம­தி­யான பொருட்­களை வாக்­கா­ளர்­க­ளுக்கு வழங்­கி­யது உறு­திப்­ப­டுத்­தப்­பட்டால், அவர்­க­ளுக்கு எதி­ராக சட்ட நட­வ­டிக்கை எடுப்­ப­தற்கு தேர்தல் ஆணைக்­குழு நட­வ­டிக்­கை­களை எடுக்கும் என்றும் அவர் தெரி­வித்­துள்ளார்.
Read more