யாழ். வடமராட்சி கட்டைக்காட்டில் கடந்த 9 ஆம் திகதி காணாமல் போன மீனவரின் சடலம் இன்று கரை ஒதுங்கியுள்ளது. வடமராட்சி கட்டடைக்காட்டுப் பகுதியைச் சேர்ந்த மீனவரான தேவதாசன் யூட்அலக்சன் (வயது 38) கடந்த 09 ஆம் திகதி கடலில் மீன்பிடிக்கச் சென்றபோது காணாமல் போயிருந்தார்.

மறுநாள் 10 ஆம் திகதி அவர் பயணித்த படகு முல்லைத்தீவு மாத்தளன் பகுதியில் கரை ஒதுங்கியிருந்தது. இந்நிலையில் அவரது சடலம் இன்றுகாலை வடமராட்சி கட்டடைக்காட்டு கடற்கரையில் கரைஒதுங்கியுள்ளது. உயிரிழந்தவர் மூன்று பிள்ளைகளின் தந்தை எனத் தெரிவிக்கப்படுகின்றது. தற்போது உடல் கட்டைக்காடு பொது மண்டபத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பளைப் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.