இலங்கையில் சமூகவலைத்தளங்களுக்கான தடை நீண்ட நாட்களாக தொடர்வதால், நாட்டின், சுற்றுலாத் துறை, தகவல் தொடர்பாடற் துறை மற்றும் பொருளாதாரத் துறை என்பவற்றுக்கு அதிக பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளது

என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர், அதுல் கேசப் கவலை வெளியிட்டுள்ளார். நாட்டின் கௌரவம் மற்றும் வெளிப்படைத் தன்மையிலும் மேற்படி தடை பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் அதுல் கேசப் டுவிட் செய்துள்ளார்.