Header image alt text

10 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே பாடசாலையில் சேவையாற்றும் 6 -11ம் தர ஆசிரியர்கள் 5473 பேருக்கு இம்மாத இறுதியில் வேறு பாடசாலைகளுக்கு இடமாற்றம் வழங்க கல்வியமைச்சு தீர்மானித்துள்ளது.

தேசிய பாடசாலை ஆசிரியர் இடமாற்றம் மூன்று கட்டங்களாக இடம்பெறுவதுடன், இதன் முதல் கட்டம் கடந்த ஆண்டு இறுதிப் பகுதியில் நடைமுறைப்படுத்தப்பட்டது. Read more

யாழ்ப்பாணம் சாவகச்சேரி பகுதியிலிருந்து விடுதலைப்புலிகள் அமைப்புக்கு சொந்தமானதென கருதப்படும் சீருடையும், வெடிப்பொருட்களும் நேற்றுமாலை மீட்கப்பட்டுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நீர்க்குழாய் ஒன்றை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் பணியாளர்களுக்கு குறித்த பொருட்கள் கிடைத்துள்ளதாகவும், இதனையடுத்து, அவர்கள் இதுதொடர்பில் பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர் Read more

முல்லைத்தீவு நாயாறு பகுதியில் மூன்று மீனவர்களுடன் பயணித்த படகொன்று காணாமற் போயுள்ளதாக கூறப்பட்டுள்ளது. நேற்று கடற்றொழிலுக்காக சென்ற மீனவர்களே காணாமற்போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சிலாபம் பங்கதெனிய பகுதியைச் சேர்ந்த மீனவர்களே இவ்வாறு காணாமற்போயுள்ளனர். காணாமற்போன மீனவர்களை தேடும் பணிகளில் கடற்படையினரும் ஈடுபட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகளை இம்மாதம் மாதம் 28ம் திகதி பெறுபேறுகளை வெளியிட எதிர்பார்த்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.

விடைத்தாள் திருத்தும் பணிகள் தற்போது நிறைவடைந்துள்ள நிலையில் பெறுபேறுகளை மதிப்பிடும் நடவடிக்கைகள் இடம்பெற்றுக் கொண்டிருப்பதாக அவர் கூறியுள்ளார். Read more

வவுனியா கோவில்குளம் பகுதியில் கனேடிய பிரஜை ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் கனடா குடியுரிமை கொண்ட 83வயதுடைய சத்தியசீலன் என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தமது பூர்வீக பகுதியான யாழில் உள்ள கோவில் உற்சவத்திற்கென தனது மனைவியுடன் கனடாவிலிருந்து இலங்கை வந்துள்ளார்.

இதேவேளை வவுனியா கோவில்குளம் சின்னப்புதுக்குளம் இரண்டாம் ஒழுங்கையில் வதியும் தனது மகனின் வீட்டில் தங்கியிருந்துள்ளனர். Read more