ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் உபகுழுக் கூட்டத்தில் இலங்கையின் பிரதிநிதிகள் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களின் பிரதிநிகள் கலந்துகொண்டனர்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 37 ஆவது கூட்டத் தொடர் ஜெனீவாவில் இடம்பெற்று வருகின்றது. இலங்­கையின் மனித உரிமை விவ­காரம் குறித்த காலக்­கி­ரம மீளாய்வு தொடர்­பான விவாதம் நாளை வெள்­ளிக்­கி­ழமை ஐக்­கி­ய­நா­டுகள் மனித உரிமை பேர­வையில் நடை­பெ­ற­வுள்­ளது. இதில் ஐக்­கிய நாடுகள் மனித உரிமை ஆணை­யாளர் செயிட் அல் ஹ_சைன் முதலில் உரை­யாற்­ற­வுள்­ள­துடன் இதன்­பின்னர் உறுப்பு நாடுகள் தமது நிலைப்­பா­டு­களை அறி­விக்­க­வுள்­ளன. கடந்த பெப்­ர­வ­ரி­மாதம் 26 ஆம் திகதி ஆரம்­ப­மான ஜெனிவா மனித உரிமை பேரவை கூட்டத்தொடர் எதிர்வரும் 23ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது. இலங்கை தொடர்பான மற்றுமொரு விவாதம் எதிர்வரும் 21ஆம் திகதி மனித உரிமை பேரவையில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.