Header image alt text

இன்று நள்ளிரவு முதல் வட்ஸ் அப் பயன்பாட்டுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்படுவதாக தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஒஸ்டின் பெர்னாண்டோ கூறியுள்ளார்.

கண்டி பிரதேசத்தில் ஏற்பட்ட குழப்பநிலையை கருத்தில் கொண்டு சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதற்கு நாட்டில் தடை விதிக்கப்பட்டிருந்தது. Read more

எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலை புதிய தேர்தல் முறையில் நடத்துவதாயின் அதன் நடைமுறைச் சாத்தியம் சம்பந்தமாக ஆராய வேண்டும் என்று தேர்தல் கண்காணிப்பு அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

தற்போது சப்ரகமுவ, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாண சபைகள் கலைக்கப்பட்டுள்ளதுடன், இந்த ஆண்டு ஒக்டோபர் மாதத்தில் வடமேல், மத்திய மற்றும் வடக்கு மாகாண சபைகளின் காலமும் நிறைவடையவுள்ளது. Read more

இவ்வருடத்தின் முதல் இரண்டு மாதங்களுக்குள் மாத்திரம் ஆயிரத்து 532 சிறுவர் துஸ்பிரயோகங்கள் பதிவாகியுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது.

பாலியல், உளவியல்,உடலியல் மற்றும் புறக்கணிப்பு உள்ளிட்ட பல்வேறு வழிகளில் சிறுவர்கள் இவ்வாறு துஸ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்களம் அல்லது அரசாங்க அதிபரால் தோட்டவெளி ஜோசப்வாஸ் நகர் மற்றும் பாப்பாமோட்டை ஆகிய இரு கிராம மீனவர்களும் தொழில் செய்யும் இடங்கள் தொடர்பில் ஒரு தீர்வு எட்டப்படும் வரை,

விடத்தல் தீவுக்கு அண்மித்த கள்ளாற்றுக்கு தெற்கு பகுதியில் உள்ள சம்பன் பாஞ்சான் கடற்பகுதியில் தோட்டவெளி – ஜோசப்வாஸ் நகர் மீனவர்கள் மேற்கொண்டு வந்த கடற்றொழில் நடவடிக்கைகளை தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கு, மன்னார் நீதவான் நீதிமன்றம் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா, இன்றையதினம் அனுமதி வழங்கியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் துறைமுகங்களை இராணுவ செயற்பாடுகளுக்காக சீனாவிற்கு வழங்குவதற்கான எவ்வித இணக்கப்பாடும் ஏற்படுத்திக்கொள்ளப்படவில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். ஜப்பானுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி, அந்நாட்டின் Nர்மு தொலைக்காட்சியுடனான நேர்காணலின் போது இதனைக் கூறியுள்ளார். டோக்கியோ நகரிலுள்ள பேரரசர் மாளிகையில், சக்கரவர்த்தி அகிஹிதோ மற்றும் மிசிகோ ராணயாரை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று சந்தித்தார். இரு நாடுகளுக்கு இடையேயான பழமையான உறவுகளைப் பலப்படுத்துவதே தமது நோக்கம் என இந்த சந்திப்பின் போது ஜனாதிபதி தெரிவித்துள்ளார். 1981 ஆம் ஆண்டு ஜப்பான் சக்கரவர்த்தி இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த போது இலங்கை மக்கள் அமோக வரவேற்பளித்தமை இந்த சந்திப்பின் போது நினைவுகூரப்பட்டுள்ளது. இந்த சந்திப்பின் பின்னர் ஜப்பான் பேரரசர் மாளிகையை ஜனாதிபதி பார்வையிட்டார். அதனை அடுத்து, டோக்கியோ நகரில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் ஜனாதிபதி பங்கேற்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி மன்றங்களுக்கு உறுப்பினர்களை நியமிப்பதற்காக கட்சிகள் மற்றும் சுயாதீனக் குழுக்கள் வழங்கியுள்ள பட்டியலின் படி 25 வீத பெண்களின் பிரதிநிதித்துவம் இல்லாத 15 உள்ளூராட்சி மன்றங்கள் காணப்படுவதாக கபே அமைப்பு தெரிவித்தது.

வர்த்தமானியில் வெளியிடுவதற்காக கட்சிகள் மற்றும் சுயாதீன குழுக்கள் அனுப்பியுள்ள பட்டியலின் படி 25 வீத பெண்களின் பிரதிநிதித்துவம் இல்லாத உள்ளூராட்சி மன்றங்களை கபே அமைப்பு வெளியிட்டுள்ளது. Read more

அவ­ச­ர­கால சட்டம் தொடர்ந்தும் நீடிக்­கப்­ப­டாது. நாட்டில் தற்­போ­துள்ள இன­வாத முரண்­பா­டு­களை முழு­மை­யாக கட்­டு­ப்ப­டுத்­திய பின்னர் வெகு விரைவில் அவ­ச­ர­கால சட்டம் நீக்­கப்­படும் என சட்டம் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்­தும பண்­டார தெரி­வித்தார்.

நாட்டில் கடந்த காலங்­களில் இருந்து இன­வாதக் கல­வ­ரங்கள் இடம்­பெற சிங்­கள பௌத்த இன­வா­தமே கார­ண­மாகும். தமி­ழர்கள் நெருக்­க­டியை சந்­திக்­கவும் இதுவே கார­ண­மாகும். ஆகவே முதலில் சிங்­கள பௌத்த இன­வா­தத்தை கட்­டு­ப­டுத்த வேண்டும் எனவும் அவர் சுட்­டிக்­காட்­டினார். Read more

தமது பணிகளை இலகுவான முறையில் முன்னெடுக்கும் நோக்கில் காணாமல் போனவர்கள் தொடர்பான அலுவலகம் மக்களின் ஆதரவை கோரியுள்ளது. காணாமல் போனவர்கள் தொடர்பான அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகள், சிவில் சமூகப் பிரதிநிதிகளை உள்ளடக்கிய அரசியல் யாப்பு பேரவையின் பரிந்துரைக்கு அமைய இந்த அலுவலகம் அமைக்கப்பட்டது. Read more

முல்லைத்தீவு செம்மலைப்பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் அம்பியூலன்ஸின் மோதி உயிரிழந்துள்ளார். இதனை தொடர்ந்து அம்பியூலன்ஸ் மீது பிரதேச மக்கள் தாக்குதல் மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று இரவு 7.30 மணியளவில் முல்லைத்தீவு மாவட்டத்தில் மாஞ்சோலை மாவட்ட மருத்துவமனையில் இருந்து, சம்பத்நுவர வெலிஓயா பகுதியில் உள்ள மருத்துவமனை நோக்கி சென்று கொண்டிருந்த அம்பியூலன்ஸ் ஒன்றும் செம்மலை பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் மோதி வித்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். Read more

முல்லைத்தீவு நாயாற்று பகுதியில் தொழிலுக்கு சென்ற சிலாபத்தினை சேர்ந்த மூன்று மீனவர்கள் இதுவரை திரும்பி வராத நிலையில் அவர்களை தேடும் நடவடிக்கையில் மீனவர்கள் தொடர்ந்தும் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த 12 ஆம் திகதி அதிகாலை முல்லைத்தீவு நாயாற்று பகுதியில் இருந்து மூன்று மீனவர்கள் ஒரு படகில் மீன்பிடிப்பதற்காக கடலுக்குச் சென்றனர். சுpலாவத்தையைச் சேர்ந்த 51 வயதுடைய மில்ராஜ் மிரண்டா, 48 வயதுடைய இமானுவேல் மிரண்டா, 24 வயதுடைய மிதுறதன் மிரண்டா என்ற மூவருமே இவ்வாறு காணமல்போனவர்களாவர். Read more