ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல்துறை உதவிப் பொதுச் செயலாளர் ஜெப்ரி பெல்ட்மென் இன்று காலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை, ஜனாதிபதி உத்தியோகபூர்வு இல்லத்தில் சந்தித்தார். இலங்கை மற்றும் ஐக்கிய நாடுகள் சபைக்கும் இடையிலான உறவுகளை உறுதிப்படுத்துவதற்காக இடம்பெறும் வருடாந்த விஜயத்திற்காகவே அவர் இலங்கை வந்துள்ளார்.
இலங்கையில் ஜனநாயக அமைதி மற்றும் நல்லிணக்கத்தை கட்டியெழுப்புதற்கு அரசாங்கம் முன்னெடுத்துள்ள செயல்பாடுகள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிக்கையொன்றை வெளியிட்டு குறிப்பிட்டுள்ளது. அரசாங்கத்தின் நல்லிணக்க செயற்பாடுகளுடன், அபிவிருத்தி முயற்சிகளுக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் முழு ஆதரவு எதிர்காலத்தில் கிடைக்கும் என ஜெப்ரி பெல்ட்மென்ரூnடிளி;இதன்போது தெரிவித்துள்ளார். Read more








