Header image alt text

ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல்துறை உதவிப் பொதுச் செயலாளர் ஜெப்ரி பெல்ட்மென் இன்று காலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை, ஜனாதிபதி உத்தியோகபூர்வு இல்லத்தில் சந்தித்தார். இலங்கை மற்றும் ஐக்கிய நாடுகள் சபைக்கும் இடையிலான உறவுகளை உறுதிப்படுத்துவதற்காக இடம்பெறும் வருடாந்த விஜயத்திற்காகவே அவர் இலங்கை வந்துள்ளார்.

இலங்கையில் ஜனநாயக அமைதி மற்றும் நல்லிணக்கத்தை கட்டியெழுப்புதற்கு அரசாங்கம் முன்னெடுத்துள்ள செயல்பாடுகள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிக்கையொன்றை வெளியிட்டு குறிப்பிட்டுள்ளது. அரசாங்கத்தின் நல்லிணக்க செயற்பாடுகளுடன், அபிவிருத்தி முயற்சிகளுக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் முழு ஆதரவு எதிர்காலத்தில் கிடைக்கும் என ஜெப்ரி பெல்ட்மென்ரூnடிளி;இதன்போது தெரிவித்துள்ளார். Read more

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஷ் முஷாரப்பை தேசத்துரோக வழக்கில் கைது செய்ய பாகிஸ்தான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

74 வயதாகும் முஷாரப் பாகிஸ்தானில் 1999 ஆம் ஆண்டு முதல் 2008ஆம் ஆண்டுவரை அதிபர் பதவி வகித்தார். 2007ஆம் ஆண்டில் அவர் பாகிஸ்தானில் நெருக்கடி நிலையை அமல்படுத்தினார். இதனால் 100க்கும் மேற்பட்ட நீதிபதிகள் பதவி நீக்கம் செய்யப்பட்டனர். இது தொடர்பாக முஷாரப் மீது 2014ஆம் ஆண்டு தேசத்துரோக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. Read more

யாழ்ப்பாணம் முகமாலையில் கண்ணிவெடிகள் அகற்றப்படாத பகுதிகளில் சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபடுவோரால் பொதுமக்களுக்கு ஆபத்து என கண்ணிவெடி அகற்றும் தொண்டு நிறுவனங்கள் எச்சரித்துள்ளன.

இது தொடர்பில் தொண்டு நிறுவன அதிகாரிகள் தெரிவித்ததாவது, முகமாலையில் சில பகுதிகளில் இன்னும் கண்ணிவெடிகள் அகற்றப்படவில்லை. அப் பகுதிகளில் இரவுவேளையில் சட்டவிரோதமாக மணல் அகழ்வுகள் இடம்பெறுகின்றன. அங்கு அள்ளப்படும் மணலை கண்ணிவெடிகள் அகற்றப்பட்ட பகுதிகளுக்குக் கொண்டுவந்து, அதற்குள் இருக்கும் வெடிபொருள்களை எடுத்து வீசுகின்றனர். Read more

கிளிநொச்சியில் அமெரிக்கப் பிரஜை ஒருவர் அடித்துக் கொலைசெய்யப்பட்டுள்ளார். அமெரிக்க பிரஜாவுரிமை பெற்ற யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் கிளிநொச்சியிலுள்ள காணியில் காயங்களுடன் மீட்கப்பட்டு, கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் கடந்த 6ஆம் திகதி இடம்பெற்றுள்ளது. இந்நிலையில், அவரது பிரேதப் பரிசோதனை அறிக்கை மூலம் அவர் கூரான ஆயுதத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளது. இந்த சம்பவத்தில் 71 வயதான இரத்தினம் துரைசிங்கம் என்ற நபரே உயிரிழந்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாணம் முகமாலையில் கண்ணிவெடிகள் அகற்றப்படாத பகுதிகளில் சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபடுவோரால் பொது மக்களுக்கு ஆபத்து என கண்ணிவெடி அகற்றும் தொண்டு நிறுவனங்கள் எச்சரித்துள்ளன.

இது தொடர்பில் தொண்டு நிறுவன அதிகாரிகள் தெரிவித்ததாவது முகமாலையில் சில பகுதிகளில் இன்னும் கண்ணிவெடிகள் அகற்றப்படவில்லை. Read more

டிரம்பை நேரில் சந்திக்க வடகொரிய அதிபர் கிம் ஜோங்-உன் அழைப்பு விடுத்தார். அந்த அழைப்பை ஏற்கவிருப்பதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.
வடகொரியா அதிபர் கிம் ஜாங்-உன் உடன் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியதாக அவரைச் சந்தித்த தென்கொரிய அதிகாரிகள் தெரிவித்தனர். Read more

இலங்கையர்கள் அனைவரும் சமாதானமாகவும், ஒற்றுமையாகவும் வாழ்வதற்காக நாட்டில் அமைதியான சூழலை உருவாக்க தேவையான எந்தவொரு ஒத்துழைப்பையும் வழங்க தயாராக இருப்பதாக முஸ்லிம் அமைப்புகளின் பிரதிநிதிகள் ஜனாதிபதியை சந்தித்து தெரிவித்துள்ளனர்.

நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலை தொடர்பில் முஸ்லிம் அமைப்புகளின் பிரதிநிதிகள் நேற்று இரவு ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதியை சந்தித்து கலந்தரையாடல் ஒன்றை மேற்கொண்டுள்ளனர். Read more

இலங்கையில் இடம்பெற்ற அசம்பாவிதங்கள் குறித்து ஐ.நா கவலை இலங்கையில் பொறுப்புக்கூறலுக்கான நகர்வுகளில் முன்னேற்றங்களை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கவுள்ளதாக ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசைன் தெரிவித்துள்ளார். இதற்காக உலகளாவிய சட்ட அதிகாரத்தைப் பயன்படுத்துமாறு உறுப்பு நாடுகளிடம் கோரவுள்ளதாக ஆணையாளர் தெரிவித்துள்ளார். ஜெனிவாவில் நேற்று (07) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள ஆணையாளர் அதில் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். Read more

கண்டியில் இடம்பெற்ற அசம்பாவிதங்களுடன் தொடர்புபட்ட பிரதான சந்தேக நபரான அமித் ஜீவன் வீரசிங்க என்பவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார். இன்று காலை பிரதான சந்தேக நபருடன் மேலும் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும். Read more

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை பிரதான வீதியில் வல்லைப் பாலத்திற்கு அருகில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். முச்சக்கர வண்டி ஒன்று சைக்கிள் ஒன்றுடன் மோதியதிலேயே விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

விபத்தில் படுகாயமடைந்த நபர் அச்சுவெலி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 50 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. முச்சக்கர வண்டியின் ஓட்டுனர் விபத்து ஏற்பட்ட பின்னர் அப்பகுதியில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.