Header image alt text

வுனியா திருநாவற்குளம் உமாமகேஸ்வரன் முன்பள்ளியின் கால் கோள் விழா முன்பள்ளி ஆசிரியை திருமதி மீரா குணசீலன் தலைமையில் 16/03/2018 அன்று வெகு சிறப்பாக நடைபெற்றது.
புதுமுக முன்பள்ளி மாணவர்களை வரவேற்கும் இவ் அறிமுக நிகழ்வின் பிரதம அதிதியாக வவுனியா நகர சபையின் முன்னாள் உப நகரபிதாவும் கோவில்குளம் 10ம் வட்டாரத்தில் தெரிவு செய்யப்பட்ட நகரசபை உறுப்பினருமான திரு க.சந்திரகுலசிங்கம்(மோகன்) அவர்கள் கலந்து கொண்டதுடன்இ நிகழ்வில் முன்பள்ளி இணைப்பாளர் திருமதி எஸ்.அருள்வேல்நாயகிஇ புளொட் அமைப்பின் சர்வதேச கிளைகளின் இணைப்பாளர் திரு ஜெகநாதன் இ தாண்டிக்குளம் 01வட்டாரத்தில் நகரசபை உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்ட சு.காண்டீபன்இ சிறுவர் மற்றும் மகளிர் பிரிவிற்கான உப பொலிஸ் பரிசோதகர் பிரியதர்சினி இ கிராம பொலிஸ் உத்தியோகத்தர் இளங்கேஸ்வரன்இ கிராம அபிவிருத்திச் சங்க உறுப்பினர் கையிலைநாதன்ஆசிரியர்கள்இ பெற்றோர்கள் மற்றும் நலன் விரும்பிகள் என பலர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது. Read more

சர்வதேச மகளிர் தினத்தையொட்டி மன்னார் மாவட்ட மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் இன்று காலை சர்வதேச பெண்கள் தின விழிர்ப்புணர்வு ஊர்வலம் இடம்பெற்றது.

மன்னார் மாவட்ட வளர் பிரை பெண்கள் திட்ட பொறுப்பதிகாரி ரி.மேரி பிரியங்கா தலைமையில் மன்னார் பொது வைத்தியசாலைக்கு முன் ஆரம்பமான குறித்த ஊர்வலம் பிரதான வீதியூடாக சென்று மன்னார் பனங்கட்டுக்கொட்டு சிகையலங்கரிப்பாளர் கூட்டுறவுச்சங்க மண்டபத்தை சென்றடைந்தது. Read more

கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 70 வயதுடைய அரசியல் கைதியொருவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். வவுனியாவைச் சேர்ந்த சண்முகநாதன் தேவகன் என்பவரே, உயிரிழந்துள்ளார்.

புலிகளுக்கு வாகனம் எடுத்துக் கொடுத்தார் என்ற குற்றச்சாட்டில், கடந்த 2008ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 10ஆம் திகதி இவர் கைது செய்யப்பட்டிருந்தார். இவருக்கு எதிரான வழக்கில் பத்து வருடங்களின் பின்னர் இவருக்கு 2 வருடச் சிறைத் தண்டனை வழங்கப்பட்டிருந்தது. Read more

முல்லைத்தீவு முள்ளியவளை கொண்டைமடு காட்டுப்பகுதியில் ஒரு தொகுதி கைக்குண்டுகளை விசேட அதிரடிப்படையினர் மீட்டுள்ளார்கள்.

கொண்டைமடு வீதியின் காட்டுப்பகுதியில், புலிகளால் பாவிக்கப்பட்ட தமிழன் எனப்படும் கைக்குண்டுகள் பல காணப்படுவதாக, முள்ளியவளை பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து, முள்ளியளை பொலீஸார் குறித்த பகுதிக்கு சென்று கைக்குண்டை அடையாளப்படுத்தி, இது தொடர்பில் விசேட அதிரடிப்படையினருக்கு தெரிவித்துள்ளார்கள். Read more

சமீபத்தில், கண்டியின் சில பாகங்களில் இடம்பெற்ற வன்முறை சம்பவம் தொடர்பான விசாரணைகள் இன்னும் நிறைவடையாத நிலையில், அவசரகாலச்சட்டத்தை, மேலும் சில நாட்களுக்கு நீடிப்பதற்கு, பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகத் தெரியவருகின்றது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில், நேற்று நடைபெற்ற வாராந்த பாதுகாப்புச் சபைக் கூட்டத்தின் போதே, இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டதாக தெரியவருகின்றது. Read more

மட்டக்களப்பு குமாரபுரம் பகுதியில் நேற்றுமாலை குழுவின் வாள்வெட்டுக்கு இலக்காகி ஒருவர் படுகாயமடைந்து மட்டு போதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

குமாரபுரம், குமாரகோவில் வீதியைச் சேர்ந்த 44 வயதுடைய சுரேந்திரன் என்பவர் தனது வீட்டை நோக்கி நேற்றுமாலை 5.30 மணிக்கு சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது வீதியில் அவரை வழிமறித்த குழுவினர் அவர் மீது வாளால் வெட்டியுள்ளனர். Read more

மட்டக்களப்பு, ஆயித்தியமலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உன்னிச்சை, சிப்பிமடு பிரதேசத்தில் துப்பாக்கிகள் இரண்டுடன் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக, ஆயித்தியமலை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி இந்துனில் ரணவீர தெரிவித்தார்.

கிடைத்த தகலொன்றையடுத்து, குறித்த பிரதேசத்தில் நேற்றுமாலை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதான நபர்களிடமிருந்து சொட்கண் துப்பாக்கிகள் இரண்டு மீட்கப்பட்டுள்ளதாக, ஆயித்தியமலை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்தார். Read more

யாழ்ப்பாணம் பருத்தித்துறை பிரதானவீதியின் சிறுப்பிட்டி வளைவு பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.

இந்த விபத்தில் ஒருவர் தலை நசியுண்டு சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார். உந்துருளியில் பயணித்த மற்றைய இளைஞன் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் கோப்பாய் பிரதேச மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் நேற்றிரவு 8:00 மணியளவில் இடம்பெற்றுள்ளது. Read more

நாட்டின் நலன் கருதி, வங்கக் கடலில் உள்ள ராமர் பாலத்திற்கு, எவ்வித சேதமும் ஏற்படாத வகையில், மாற்று வழித் தடத்தில், சேது சமுத்திர திட்டம் செயல்படுத்தப்படும் என, மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதன்மூலம், மத உணர்வுகளை புண்படுத்தாமல், சுமுகமான முறையில் வளர்ச்சித் திட்டத்தை நிறைவேற்றுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தியா – இலங்கை இடையே, கடல் வழி வர்த்தகம், போக்குவரத்தை மேம்படுத்தும் வகையில், வங்கக் கடலில், சேது சமுத்திர திட்டத்தை செயல்படுத்த, மத்திய அரசு திட்டமிட்டது. Read more

ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் பிரதம நிறைவேற்றதிகாரி மற்றும் பணிப்பாளர் சபையின் செயற்பாடுகள் தொடர்பில் நம்பிக்கையில்லை என ஸ்ரீலங்கன் விமான நிறுவன விமானிகள் சங்கம் கடிதமொன்றின் ஊடாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அறிவித்துள்ளது.

இலங்கை விமானிகள் சங்கம், இலங்கை சுதந்திர ஊழியர் சங்கம், விமான உதவியாளர்கள் சங்கம் மற்றும் இலங்கை விமான சேவை நிறைவேற்று சங்கம் ஆகியன இணைந்து ஜனாதிபதிக்கு இந்த கடிதத்தை அனுப்பியுள்ளன. Read more