2018 உலக இறப்பர் உச்சிமாநாடு அடுத்த மாதம் 7 ஆம் திகதி முதல் 11 ஆம் திகதி வரை கொழும்பில் நடைபெறவுள்ளது. இறப்பர் தொழில்நுட்பத்தின் ஒவ்வொரு துறையையும் பிரதிநிதித்துவப்படுத்தும் 200 க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் இதில் பங்குபற்றவுள்ளதாக பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.
சர்வதேச இறப்பர் ஆராய்ச்சி குழுவின் 25 உறுப்பினர்கள் இந்த நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளதாகவும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.