தோழமை உணர்வுள்ள சுவிஸ் வாழ் தமிழ் மக்களே, கழகத் தோழர்களே, ஆதரவாளர்களே, தோழமைக் கட்சி உறுப்பினர்களே…
சுவிஸ் சூரிச் மாநிலத்தில், 01.05.2018 செவ்வாய்க்கிழமை அன்று காலை 09.00 மணிக்கு ஆரம்பமாகும் “மேதின ஊர்வலத்தில்” கலந்து கொண்டு ஜனநாயக போராட்டத்துக்கு வலுசேர்ப்போம். சுவிஸ் சூரிச் மாநிலத்தில், சுவிஸ் தொழிற் சங்கங்கள், முற்போக்கு முன்னணிகள், இடதுசாரி அமைப்புக்கள், மற்றும் உலகில் உரிமைக்காகப் போராடும் பல இன மக்கள், மற்றும் அனைத்து தொழிலாளர் வர்க்கத்துடன் இணைந்து இலங்கை தாயகத்தில் தமிழினத்தின் ஜனநாயக தீர்வினை அரசு அங்கீகரிக்க, சர்வதேசம் தனது நியாயமான பங்களிப்பை வழங்குமாறு வலியுறுத்தி, எமதின உரிமைப் போராட்டத்தை ஜனநாயக வழியில், உறுதியான வெற்றிக்கு இட்டுச் செல்ல வலுசேர்ப்போமாக.
சுவிஸ் சூரிச் மாநிலத்தில், 01.05.2018 செவ்வாய்க்கிழமை அன்று காலை 09.00 மணிக்கு, Helvetiaplatz இல் ஆரம்பித்து, Bürkliplatz இல் முடிவடையும்..
தொடர்புக்கு… 078.6461681, 078.9167111, 079.7333539, 079.9401982, 079.9297719, 076.5838410, 076.4454112, 077.9485214
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) சுவிஸ்கிளை
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (டிபிஎல்ப்) சுவிஸ்கிளை
இன்றைய தினம் ஜேர்மன் ஸ்ருட்காட்டில் இடம்பெற்ற “சர்வதேச இலங்கையர் டயஸ் போரா” (INSD) கூட்டத்தில் இலங்கையின் அரசியல், அரசியல் கைதிகள் விடுதலை குறித்து வலுவாக செயற்பட வேண்டியதன் அவசியம் உட்பட பல்வேறு விடயங்கள் குறித்து முடிவெடுக்கப்பட்டுள்ளது .
இலங்கையின் சுகாதார சேவையை மேம்படுத்த கியூபா அரசாங்கம் முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாக தெரிவித்துள்ளது.
யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியிலுள்ள வீடொன்றுக்குள் புகுந்த வாள்வெட்டுக் கும்பல் அங்கு வசித்த நடன ஆசிரியையும், அவரது தாயாரையும் வாளால் வெட்டிக் காயப்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
யாழ். பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகம், எதிர்வரும் 21ஆம் திகதி திறக்கப்படவுள்ளதென, வளாகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கு நாடு கடத்தப்படவுள்ள, இலங்கை குடும்பத்திற்கு ஆதரவாக அவுஸ்திரேலியாவில் அமைதிப் போராட்டம் ஒன்று நாளை நடத்தப்படவுள்ளது.
யுத்த காலத்தில், பலாலி விமானப்படை மற்றும் ஏனைய பிரதேசங்களிலும், இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டிருந்த, பொதுமக்களுக்குச் சொந்தமான 27,000 ஏக்கர் காணிகளில், 3,467 ஏக்கர் காணிகள் மாத்திரமே விடுவிக்கப்படாமல் இருக்கின்றன என, பாதுகாப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில், பொதுமக்கள் மற்றும் ஊடகவியலாளர்களை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்ட தீவிரவாத தாக்குதல்களுக்கு இலங்கை அரசாங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இலங்கை இராணுவத்தளபதி லெப்டினல் ஜெனரால் மகேஸ் சேனாநாயக்கவுக்கும் பாகிஸ்தான் பிரதமர் ஷஹிட் காகான் அப்பாசிக்கும் இடையே அண்மையில் சந்திப்பொன்று இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சந்திப்பின்போது விரிவாக பல விடங்கள் கு
கனடாவில் கொலையுண்ட ஈழ ஏதிலியான கிருஷ்ணகுமார் கனகரத்தினத்தின் நினைவு நிகழ்வு நேற்றையதினம் கனடாவின் டொரென்டோ நகரில் நடைபெற்றது.