தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட கறுப்பு ஜூலையின் 35ஆவது ஆண்டு நிறைவைக் நினைவுகூறும் தமிழர்களுடன் தானும் இணைந்துகொள்வதாக கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடே தெரிவித்துள்ளார். கறுப்பு ஜூலை நினைவேந்தலை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள விசேட அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘1983ஆம் ஆண்டு தமிழர்களுக்கு எதிரான படுகொலைகளில் பாதிக்கப்பட்டவர்களை இந்த நாளில், நாம் நினைவு கூருகிறோம். அப்போது ஆயிரக்கணக்கான உயிர்கள் பலியெடுக்கப்பட்டன. பலர் தமது வீடுகளை விட்டு இடம்பெயர்ந்தனர். கறுப்பு ஜூலை ஒரு அழிவு வாரமாக இருந்தது. கொடூரமான இந்த வன்முறைகளின் தொடர்ச்சியாக, பல பத்தாண்டுகளாக பதற்றம் அதிகரித்தது. Read more
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 9ஆம் திகதி கொழும்பு மேல் நீதிமன்றில் ஆஜராக வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது.
இலங்கை உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த அகதிகள் அடங்கிய படகு ஒன்றை அவுஸ்திரேலிய அரசாங்கம் இன்று அதிகாலை திருப்பி அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அவுஸ்திரேலிய குடிவரவுத்துறை அமைச்சர் பீற்றர் டட்டடனை மேற்கோள்காட்டி அந்த நாட்டின் ஊடகங்கள் இந்த செய்தியை வெளியிட்டிருக்கின்றன.
விடுதலைப் புலிகள் மீள உருவாக்கம் செய்ய வேண்டுமென்று ஆற்றிய உரை தொடர்பாக விஜயகலா மகேஸ்வரனிடம் கொழும்பு விசேட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். யாழில் உள்ள அவரது வீட்டில் வைத்து இன்று மாலை 4 மணிமுதல் சுமார் மூன்றரை மணித்தியாலயங்கள் இந்த விசாரணை இடம்பெற்றுள்ளது.
திருகோணமலை மூதூர் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மூதூர் பொலிஸிற்கு முன்னால் உள்ள கடலில், கடல் மட்டி எடுத்துக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர் நேற்று நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
யாழ். வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பகுதியில் வாள்களுடன் 13 இளைஞர்களை சாவகச்சேரி பொலிஸார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்த வாள்கள், கம்பிகள் போன்றவற்றையும் அவர்கள் பயணித்த வாகனத்தையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.