மன்னார் ´சதொச´ விற்பனை நிலைய வளாகத்தில் இன்று 42ஆவது நாளாகவும் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் மனித புதைகுழி அகழ்வின் போது, மீட்கப்பட்ட மனித எலும்புக் கூடுகள் பலவற்றில் கூரிய ஆயுதத்தால் பலமாக தாக்கப்பட்டமையால் ஏற்படும் முறிவுகளை காணக்கூடியதாக இருப்பதாக அகழ்வில் ஈடுபட்ட நிபுணர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
எனினும் தற்போது வரை மீட்கப்பட்டுள்ள எந்தவொரு மனித எலும்புக்கூடுகளிலும் துப்பாக்கிச்சூட்டுக் காயங்கள் எதுவும் காணப்படவில்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர். அகழ்வு பணிகளை தொடர்ந்து இன்று அவர்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், மேலும் கண்டுபிடிக்கப்பட்ட எலும்புக்கூடுகளில் 5 சிறு பிள்ளைகளின் எலும்புக்கூடுகளும் காணப்படுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். Read more
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்மட்டத் தலைவர்களின் குழு ஒன்று இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி இந்த குழு கொழும்புக்கு வரவுள்ளது.
கல்விக் கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கும் நவீனமயப்படுத்துவதற்கும் இலங்கை முன்னெடுத்துவரும் முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதற்காக 100 மில்லியன் அமெரிக்க டொலர்களை உலக வங்கி வழங்க முன்வந்துள்ளது.
வடக்கு மற்றும் கிழக்கு உள்ளிட்ட 7 மாகாணங்களுக்கான தேர்தலை ஜனவரி மாதத்தில் நடத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
யாழ்ப்பாணம் – சுழிபுரம் பிரதேசத்தில் 6 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதாகியிருந்த 3 பேரும் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் நேற்று முன்தினம் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
கிளிநொச்சியில் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தில் பணியாற்றுகின்ற உத்தியோகத்தர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்வு இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது.
நாட்டின் நெருக்கடிகளுக்கு தீர்வுகாண அரசியல் அமைப்பு திருத்தம் அல்லது புதிய அரசியல் யாப்பு அவசியம் என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க வலியுறுத்தியுள்ளார்.
நாட்டில் மீண்டும் மரணதண்டனையை நிறைவேற்றுதல் தொடர்பிலான கருத்தாடல் குறித்த, ஐரோப்பிய ஒன்றியத்தின் எச்சரிக்கையை நிராகரித்த, அரசாங்கம் ஜி.எஸ்.பி.பிளஸ் சலுகைகளை இழப்பதற்கான வாய்ப்பு குறித்து கவலைப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளது.
யாழ். சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தான் மோசமாக நடத்தப்பட்டதாகக் கூறி, மாற்றுத்திறனாளியான கைதியொருவர், மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார்.
மத்தல விமான நிலையம் இந்தியா வசமாவது, இலங்கையின் தேசிய பாதுகாப்புக்கு கடும் அச்சுறுத்தலெனக் குறிப்பிட்டுள்ள, ஜே.வி.பியின் ஊடகப்பேச்சாளரும் எம்.பியுமான, விஜித ஹேரத், ‘அந்த விமான நிலையம், இந்தியா வசமாவதை கடுமையாக எதிர்ப்போம்’ என்றார்.