பாகிஸ்தானின் புதிய பிரதமராக இம்ரான்கான் பாகிஸ்தானின் சுதந்திரமான ஆகஸ்ட் மாதம் 14 ஆம் திகதிக்கு முன்னர் பதவியேற்பார் என தெஹ்ரீக்–இ–இன்சாப் கட்சி அறிவித்துள்ளதாக சர்வசே ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
புதிய பிரதமராக பதவியேற்கும் இம்ரான்கானுக்கு ஏராளமான சவால்கள் காத்திருப்பதாக அரசியல் நோக்கர்கள் கூறியுள்ளனர். பாகிஸ்தான் நாடாளுமன்றத்துக்கு கடந்த 25 ஆம் திகதி தேர்தல் நடந்தது. இதில் முன்னாள் பிரதமரும், ஊழல் வழக்கில் சிறையில் இருப்பவருமான நவாஸ் செரீப்பின் முஸ்லிம் லீக் கட்சி, Read more
இலங்கையில் உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் தனது தாயாரை பார்க்கச் சென்ற இலங்கை தமிழர் ஒருவர் இரண்டாவது தடவையாகவும் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தற்கொலைகளைத் தடுப்பது தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று, புத்திஜீவிகள் சபையின் ஏற்பாட்டில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. “தற்கொலை தடுப்பு சர்வதேச தினம்”, அடுத்த மாதம் 10ஆம் திகதி அனுஸ்டிக்கப்படவுள்ளது.
ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்திற்கு எயார் பஸ் ஏ -321 ரக புதிய விமானமொன்று சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளது.
வெளிக்கந்த சேனபுர பகுதியில் உள்ள போதைப் பொருள் பாவனையாளர்களுக்கான புனர்வாழ்வு முகாமிலிருந்து நேற்று இரண்டு கைதிகள் தப்பிச் சென்றுள்ளதாக வெளிக்கந்த பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
விசா அனுமதிப்பத்திரமின்றி ஐக்கிய அரபு அமீரகத்தில் தங்கியுள்ள இலங்கையர்களுக்கு அங்கிருந்து வெளியேற பொது மன்னிப்பு காலம் வழங்கப்பட்டுள்ளது.