வியட்நாமின் ஹெநோய் நகரில் இடம்பெறும் ஆசியான் – உலக பொருளாதார மாநாட்டில் பங்குகொள்ள சென்றுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று இந்தோனேசிய ஜனாதிபதி ஜோகோ விடோட்டோவைச் சந்தித்துள்ளார்.
பிரதமரின் ஊடக பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. இதன்போது இரு நாடுகளுக்கும் இடையிலான சகோதரத்துவத்தை வலுப்படுத்துவது தொடர்பிலான இரு தரப்பு பேச்சு வார்த்தை இடம்பெற்றுள்ளது. Read more
பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு பதிலாக கொண்டுவரப்படும் புதிய சட்டமூலம் சர்வதேச மனித உரிமை நியமங்களுக்கு அமைவதானதாக இருக்க வேண்டும் என தன்னிச்சையாக தடுத்து வைத்தல் தொடர்பான ஐக்கிய நாடுகளின் செயற்குழு இன்று ஜெனிவா மனித உரிமைப் பேரவையில் தெரிவித்துள்ளது.
இந்தியா சென்றுள்ள இலங்கை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இன்று டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார்.
எதிர்வரும் 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் தனது சகோதரன் வேட்பாளராக இருக்கலாம் என்றும், அதனை கட்சியே முடிவு செய்யும் என்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
மன்னாரில் தொடர்சியாக அகழ்வு பணிகள், மனித எலும்புக்கூடுகள் அடையாளப்படுத்தும் பணிகள் மற்றும் அப்புறபடுத்தும் பணிகள் என பல்வேறு கட்டமாக செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றது.
பேருவளை கடற்பரப்பில், கப்பலுடன், மீன்பிடி படகொன்று மோதி விபத்துக்குள்ளானதில், மீனவர்கள் நால்வர் பலியாகியுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
புத்தரின் உருவப்படம் பொறித்த சேலை அணிந்திருந்த இளம்பெண் சட்டத்தரணியொருவர், யாழ் பொலிசாரால் கைதுசெய்ய முயற்சிக்கப்பட்டதில் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
யாழ்ப்பாணம் கொடிகாமம் பகுதியில் பொலிஸ் ஜீப்பினை கடத்தியமை தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிளிநொச்சி பொதுச் சந்தையினை ரவுடிக்கும்பல் ஒன்று. இன்று மாலை ஆறு மணி முதல் ஆறு 45 மணி வரை தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்துள்ளது.