முல்லைத்தீவு மாவட்டத்தில் 12651பேர் வெள்ளத்தால் பாதிப்புக்குள்ளான தொகையை அனர்த்த முகாமைத்துவப்பிரிவு இறுதி அறிக்கையை வெளியிட்டது.

முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவின் இறுதி அறிக்கையின்படி, ஆறு பிரதேசசெலகப் பிரிவுகளிலும் மொத்தமாக 3794குடும்பங்களைச் சேர்ந்த 12651பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேவேளை இருபத்தைந்து(25) இடைத்தங்கல் முகாங்களில், 1240குடும்பங்களைச்சேர்ந்த, 3805பேர் தங்கவைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.