இலங்கைக்கு சட்டவிரோதமாக 30 கிலோகிராம் கஞ்சாவை கொண்டுவர முயற்சி செய்த இலங்கை பிரஜைகள் இருவர் உட்பட நால்வர் தமிழ்நாடு – மதுரை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் நால்வரில் இருவர், இலங்கைப் பிரஜைகளென்றும், மற்றைய இருவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களென்றும் தெரிவித்தப் பொலிஸார், அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட குறித்த கஞ்சாவின் இந்திய பெறுமதி 88 ஆயிரம் ரூபாய் எனத் தெரிவித்தனர். மேலும் குறித்த நபர்களிடமிருந்து மலேஷிய பணம் ஒரு தொகையும் கண்டுபிடிக்கப்பட்டதாக இந்திய ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளன.