கிளிநொச்சி – உதயநகர் கிழக்கு பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் இன்றுகாலை 7.45மணியளவில் கூரிய ஆயுதத்தால் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். கூட்டுறவு காப்புறுதி நிறுவன கிளிநொச்சி கிளை முகாமையாளரான காந்தலிங்கம் பிறேமரமணன் (32) என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
வவுனியா – வேப்பங்குளத்தைச் சேர்ந்த இவர் ஒரு பிள்ளையின் தந்தையென தெரியவருகிறது. இவர் தனது அலுவலக பணிப்பாளருடன் கிளிநொச்சி ஏ9 வீதியில் அமைந்துள்ள அலுவலகத்திற்கு உதயநகர் கிழக்கில் இருந்து புறப்படும்போது உந்துருளியில் வந்த ஒருவர் அவரை சரமாரியாக வெட்டியுள்ளார். Read more
வவுனியா ஆசிகுளம் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலைக்கு முன்பாக உள்ள வீதியில் பஸ் உட்பட வாகனங்கள் வேகமாக செல்வதால் பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
இலங்கை தொடர்பில் ஜெனிவாவில் முன்வைக்கப்படவுள்ள பிரேரணை தொடர்பான முதலாவது ஆலோசனை கலந்துரையாடல் இன்று இடம்பெறவுள்ளது. ஜெனிவா மனித உரிமை பேரவையின் குழு அறையில் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.
17 கோரிக்கைகளை முன்வைத்து கிராம உத்தியோகத்தர்கள் இன்று சுகயீன விடுமுறை போராட்டமொன்றில் ஈடுபட தீர்மானித்துள்ளனர். இலங்கை ஐக்கிய கிராம உத்தியோகத்தர்கள் சங்கம் கொழும்பில் நேற்று ஏற்பாடு செய்த செய்தியாளர் சந்திப்பில் தமது பணிப்பகிஷ்கரிப்பு தொடர்பில் அறிவித்திருந்தது.