யாழ்ப்பாணம் மண்டைதீவு கடற்பரப்பில் படகு ஒன்று விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது. மண்டைதீவினை சேர்ந்த ஜோன் அண்டனி டினேஷ் என்ற 19வயதுடைய இளைஞரே உயிரிழந்துள்ளார்.
குறித்த இளைஞர் தனது நண்பருடன் கடலுக்கு மீன்பிடிக்க சென்ற வேளையில் கடல்காற்றின் வேகம் அதிகரித்தமையினால் படகு கவிழ்ந்துள்ளது. இந்நிலையில், படகிலிருந்து இருவர் கடலில் மூழ்கியபோது ஒருவர் நீந்தி கரைசேர்ந்துள்ளார். மற்றைய இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதோடு அவரின் சடலத்தை மீட்ட மீனவர்கள் உறவினர்களிடம் ஒப்படைத்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணை செய்துவருகின்றனர்.
வவுனியா நெளுக்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சுற்றுவட்ட வீதியில் நேற்று அதிகாலை கிணற்றிலிருந்து வெட்டுக்காயங்களுடன் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டிருந்தது.
வில்பத்து காடழிப்புக்கு எதிராக பாரிய எதிர்ப்பு போராட்டம் ஒன்றை ஏற்பாடு செய்யவுள்ளதாக வில்பத்துவை பாதுகாப்போம் அமைப்பு கூறியுள்ளது.
கொத்தணிக் குண்டுகள் தடுப்புத் தொடர்பான சாசனமான ஒஸ்லோ உடன்படிக்கையை, இந்நாட்டின் சட்டத்துக்குள் உள்ளீர்த்துக்கொள்வதற்காக, அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.