புலம்பெயர்ந்த தாயக உறவுகளினால் உதவி வழங்கும் செயற்திட்டத்தின்கீழ் மட்டக்களப்பு கன்னங்குடா மகாவித்தியாலயத்தில் க.பொ.த உயர்தரத்தில் கல்வி பயிலும் தியாகராஜா வனிதா என்ற மாணவியின் கல்விச் செயற்பாட்டை ஊக்குவிப்பதற்காக துவிச்சக்கரவண்டி வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்)யின் சுவிஸ் உறுப்பினர் திரு. விஜயநாதன் ரட்ணகுமார் அவர்கள் தனது தந்தையாரான வைத்திலிங்கம் விஜயநாதன் அவர்களின் மூன்றாமாண்டு நினைவுதினத்தை முன்னிட்டு. Read more
இலங்கை தொடர்பாக ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் கடந்த வாரம் நிறைவேற்றப்பட்ட பிரேரணையின் அமுலாக்கத்துக்கு 3 லட்சத்து 37ஆயிரத்து 800 அமெரிக்க டொலர்கள் செலவாகும் என்று தெரிவிக்கப்படுகிறது.
முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயத்தை அபகரித்து விகாரை மற்றும் புத்தர் சிலையை அமைத்துள்ள பௌத்த பிக்குவால் பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய நிர்வாகத்துக்கு எதிராகவும் பிள்ளையார் ஆலயத்துக்கு வழிபாடுகளுக்கு சென்ற மக்களுக்கு எதிராகவும் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யபட்டு முல்லைத்தீவு பொலிசாரால் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யபட்டுள்ளது.
மத்திய வங்கியின் முன்னாள் பிரதி ஆணையாளர் பி.சமரசிறி மற்றும் பேர்பெச்சுவல் ட்ரெஷரீஸ் லிமிட்டெட் பணிப்பாளர்கள் மூவர், குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.