சித்திரவதையை தடுப்பு சம்பந்தமான தொடர்பான ஐக்கிய நாடுகள் அமைப்பின் துணைக்குழு ஏப்ரல் முதல் வாரத்தில் இலங்கைக்கு விஜயம் செய்ய திட்டமிட்டுள்ளது. அதன்படி அவர்கள் ஏப்ரல் 2 முதல் 12 வரை இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளனர்.
ஐக்கிய நாடுகள் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் கூறப்பட்டுள்ளது. நான்கு பேர் கொண்ட குழுவினர் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதுடன், மோல்டோ, மொரிஷியஸ், சைப்ரஸ் மற்றும் பிலிப்பைன்ஸின் நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பெப்ரவரி 18 வது முதல் 22ம் திகதி வரை இடம்பெற்ற இரகசிய கூட்டத் தொடர் ஒன்றில் சித்திரவதையை தடுப்பு சம்பந்தமான தொடர்பான ஐக்கிய நாடுகள் அமைப்பின் துணைக்குழு ஒன்றை இலங்கைக்கு அனுப்ப தீர்மானிக்கப்பட்டுள்ளது. Read more
வெளிநாட்டு தூதுவர் பதவிகளுக்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் பரிந்துரை செய்யப்பட்ட பாராளுமன்ற உயர்பதவிகள் குழு அனுமதி வழங்கியுள்ளதாக வெளிவிவகார அமைச்சு கூறியுள்ளது.
மட்டக்களப்பு வந்தாறுமூலை சந்தைக்கு அருகில் மூன்று மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகி இரண்டு மோட்டர் சைக்கிள்கள் தீப்பற்றி எரிந்ததில் மூவர் உயிரிழந்தள்ளனர். நேற்று வெள்ளிக்கிழமை இரவு 7.30 மணிக்கு விபத்து இடம்பெற்றுள்ளதாக ஏறாவூர் பொலிசார் தெரிவித்தனர்.