இராணுவத்தின் பாவனையில் கிழக்கு பகுதிகளில் இருந்த காணிகள் இம் மாதம் (25)ஆம் திகதி விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என இராணுவம் தெரிவித்துள்ளது.
குச்சவெளி, கல்முனை மற்றும் திருக்கோவில் பிரதேச செயலகத்திற்குரிய திரியாய், பெரியநிலாவெளி பிரதேசங்களிலுள்ள 5.05 ஏக்கர் காணிகள் 4ஆவது கட்டமாக விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவைகளில் 3.5 ஏக்கர் காணி நிலப்பரப்புகள் தனியாருக்கு சொந்தமானதாகும். Read more
யாழ்ப்பாணம் மண்டைதீவு கடற்பரப்பில் படகு ஒன்று விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது. மண்டைதீவினை சேர்ந்த ஜோன் அண்டனி டினேஷ் என்ற 19வயதுடைய இளைஞரே உயிரிழந்துள்ளார்.
வவுனியா நெளுக்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சுற்றுவட்ட வீதியில் நேற்று அதிகாலை கிணற்றிலிருந்து வெட்டுக்காயங்களுடன் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டிருந்தது.
வில்பத்து காடழிப்புக்கு எதிராக பாரிய எதிர்ப்பு போராட்டம் ஒன்றை ஏற்பாடு செய்யவுள்ளதாக வில்பத்துவை பாதுகாப்போம் அமைப்பு கூறியுள்ளது.
கொத்தணிக் குண்டுகள் தடுப்புத் தொடர்பான சாசனமான ஒஸ்லோ உடன்படிக்கையை, இந்நாட்டின் சட்டத்துக்குள் உள்ளீர்த்துக்கொள்வதற்காக, அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் முன்னாள் உபதலைவர் அமரர் கரவை ஏ.சி. கந்தசாமி அவர்களின் துணைவியார் வசந்தாதேவி கந்தசாமி அவர்கள் 17.03.2019 ஞாயிற்றுக்கிழமை கனடாவில் காலமானார் என்பதை மிகுந்த துயருடன் அறியத்தருகின்றோம்.
சிவனொளிபாதமலையின் அடிவாரத்தில் மஸ்கெலியா பிரதேச சபையால் வைக்கப்பட்ட பெயர் பலகைக்கு விசமிகள் சிலர் இன்று தார் ஊற்றி சேதம் விளைவித்தமையினால் அப்பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டிருந்தது.
மன்னார் பிரதேச சபை பிரிவுக்குற்பட்ட திருக்கேதீஸ்வரம் நாவற்குளம் பகுதியில்,இராணுவத்தின் வசமிருந்து கடந்த சில வருடங்களுக்கு முன் விடுவிக்கப்பட்ட தனியாருக்குச் சொந்தமான காணியில் தற்போது அப்பகுதியில் உள்ள இராணுவத்தினர், இராணுவத்திற்குச் சொந்தமான பல்வேறு கழிவுப்பொருட்களை கொட்டப்பட்டு தீ இட்டு எரிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையின் நல்லிணக்கம், பொறுப்புக் கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துவது தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் தயாரித்த அறிக்கை ஜெனீவாவில் இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் முதலாவது அமர்வின்போது இந்த அறிக்கை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாக, ஜெனீவாவிலுள்ள இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி அலுவலகம் தெரிவித்துள்ளது.
புலம்பெயர்ந்த தாயக உறவுகளினால் உதவி வழங்கும் செயற்திட்டத்தின்கீழ் முல்லைத்தீவு ஒட்டுசுட்டானில் அமைந்துள்ள நாவலர் முன்பள்ளிக்கு 19,500 பெறுமதியான இரும்பு அலுமாரி ஒன்று வழங்கிவைப்பட்டுள்ளது.