பாதாளக் குழு, போதை வர்த்தகம் உள்ளிட்ட பாரிய குற்றச்சாட்டுகளின் கீழ் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளை பூஸா சிறைச்சாலைக்கு இடம் மாற்றுவதற்கு சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு தீர்மானித்துள்ளது.

எதிர்வரும் மாதங்களுக்குள் கைதிகளை பூஸா சிறைச்சாலைக்கு மாற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என்றும் அமைச்சு தெரிவித்துள்ளது. இதுவரை குற்றவிசாரணைப் பிரிவினரின் பொறுப்பின்கீழ் காணப்பட்ட பூஸா சிறைச்சாலையானது கடந்த வாரம் சிறைச்சாலைகள் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.