இலங்கையின் மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுசெயலாளர் அன்தோனியோ குட்டெரெஸ் அறிவித்துள்ளார்.
நிதி அமைச்சர் மங்கள சமரவீர நியுயோர்க் விஜயம் செய்துள்ள நிலையில், நேற்று ஐக்கிய நாடுகளின் பொதுசெயலாளரை சந்தித்திருந்தார். இதன்போது இலங்கையின் பேண்தகுதி அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கும், மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்கும் ஐக்கிய நாடுகள் சபை தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்கும் என்று ஐக்கிய நாடுகளின் பொதுசெயலாளர் உறுதியளித்துள்ளார். Read more
அரச நிறுவனங்களுக்கு வருகைதரும் விசேட தேவையுடையவர்கள் தமது சேவைகளை இலகுவாக பெற்றுக்கொள்வதற்கான வசதியை ஏற்படுத்துமாறு சில அரச நிறுவனங்களுக்கு உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
நன்னடத்தை மற்றும் குழந்தை பராமரிப்பு சேவைகள் திணைக்களத்துக்கு சிறுவர் துஷ்பிரேயோகங்கள் தொடர்பில் கடந்த 2017ஆம் ஆண்டு மாத்திரம் 12,093 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதென, குறித்த திணைக்களத்தின் 2017ஆம் ஆண்டுக்குரிய செயற்திறன் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
மலேசியாவில் இருந்து கட்டுநாயக்க நோக்கி வருகை தந்த விமானம் மத்தள விமான நிலையத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. லங்கன் விமான சேவைக்கு சொந்தமான UL315 என்ற விமானமே இவ்வாறு திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.
இலங்கை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோவுக்கும் பாகிஸ்தான் பாதுகாப்பு தரப்பினருக்கும் இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.