இலங்கைக்கு சுற்றுலாப் பயணம் மேற்கொண்டு வருகை தந்திருந்த வெளிநாட்டுப் பிரஜைகள் பலரும் தற்பொழுது இலங்கையை விட்டு வெளியேறி வருகின்றமையை காணமுடிகின்றது.
இலங்கையை வந்தடைந்த சுற்றுலாப் பயணிகள் பலரும் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து, அடுத்த விமானத்திலேயே வெளியேறி செல்வதாகவும் கட்டுநாயக்க விமானநிலைய பேச்சாளரொருவர் தெரிவித்துள்ளார்.
காவற்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோவையும் தமது பதவிகளில் இருந்து விலகுமாறு ஜனாதிபதி அறிவித்துள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பயங்கரவாத செயற்பாடுகள் தொடர்பில் சந்தேகப்படும் வகையில் நபர்கள் மற்றும் வாகனங்கள், பயங்கரவாத செயற்பாடுகள் குறித்து அறியக் கிடைத்தால், அதுபற்றி அறிவிக்க, இராணுவத் தலைமையகம் விசேட தொலைபேசி இலக்கங்கள் சிலவற்றை அறிமுகம் செய்துள்ளது.
கடந்த 21ஆம் திகதி தற்கொலைத் தாக்குதல்களுக்கு பயன்படுத்தப்பட்ட குண்டுகளைத் தயாரித்த தொழிற்சாலையென சந்தேகிக்கப்படும் தொழிற்சாலையொன்று முற்றுகையிடப்பட்டுள்ளது.
கேகாலை, வரகாபொல பிரதேசத்தில் சந்தேகத்திற்கிடமான வேன் ஒன்றுடன் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் கூறியுள்ளது. சந்தேகநபர்களுடன் சேர்த்து SG PH-3779 என்ற வேன் வரகாபொல பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.