மட்டக்களப்பு நகரில் உள்ள வர்த்தக நிலையத்திற்கு பின்புறமான பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு நகரின் மணிக்கூண்டு கோபுரத்திற்கு அருகில் உள்ள வர்த்தக நிலையத்திற்கு பின்புறமாகவுள்ள கட்டிடத்தில் நகைத் தொழில் செய்துவரும் நபர் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர். சடலமாக மீட்கப்பட்டவர் மட்டக்களப்பு கொக்குவில் பகுதியை சேர்ந்த க.அருட்செல்வம் (44 வயது) என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அவர் தொழில் செய்யும் பகுதிக்கு முன்பாகவுள்ள பகுதியிலேயே இவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இதுபற்றி மட்டக்களப்பு தலைமையக பொலிஸாரும், படையினரும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.