 மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதலில் படுகாயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வந்த மற்றுமொருவர் நேற்று மாலை உயிரிழந்துள்ளார்.
மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதலில் படுகாயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வந்த மற்றுமொருவர் நேற்று மாலை உயிரிழந்துள்ளார்.
இதன்மூலம் மட்டக்களப்பு சியோன் தேவாலயத் தாக்குதலில் உயிரிழந்தோர் தொகை 27ஆக உயர்ந்துள்ளது. மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சைபெற்று வந்த நாவற்குடாவினை சேர்ந்த சுரங்க என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
