மதவாச்சி பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்த தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்பின் இலங்கைத் தலைவர் ஸஹ்ரானின், ஊடகச் செயலாளரை, 72 மணித்தியாலங்களுக்கு விசாரணை செய்ய அநுராதபுரம் பிரதான நீதவான் நீதிமன்றத்தால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இன்று குறித்த சந்தேகநபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போதே, நீதவானால் இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.