 பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் நிதியமைச்சர் மங்கள சமரவீரவும், இரண்டு நாள்கள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு, இன்று யாழ்ப்பாணம் விஜயம் செய்கின்றனர்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் நிதியமைச்சர் மங்கள சமரவீரவும், இரண்டு நாள்கள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு, இன்று யாழ்ப்பாணம் விஜயம் செய்கின்றனர்.
இந்த இரண்டு நாள் விஜயத்தின்போது, வடக்கின் அபிவிருத்தி குறித்து கூடுதல் கவனம் செலுத்தப்படும் என்றும் இதன்போது, பண்டத்தரிப்பில் அமைக்கப்பட்டுள்ள சிறு எண்ணெய் தொழிற்சாலையை, நிதியமைச்சர் திறந்து வைக்கவுள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. அரியாலை நெடுங்குளத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள வீடுகளை, பயனாளிகளிடம் கையளிக்கும் நிகழ்விலும் இவர்கள் கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
