Header image alt text

அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பிரதேசத்தில் வீடொன்றில் இடம்பெற்ற தற்கொலை தாக்குதலில் பலியான நான்கு பேரின் சடலங்கள் இன்று தோண்டி எடுக்கப்பட்டுள்ளன.

இரசாயண பகுப்பாய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்த குறித்த சடலங்களின் உடற் கூறுகள் பழுதடைந்துள்ளமையால் மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டுள்ளன. கடந்த ஏப்ரல் 26ஆம் திகதி சாய்ந்தமருது பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றில் வைத்து, பாதுகாப்புத் தரப்பினருடன் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தின்போது இடம்பெற்ற தற்கொலை தாக்குதலில் 15 பேர் பலியாகினர். Read more

கிடைக்கப் பெற்ற இரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையில் நீர்கொழும்பு, ஏத்துகால பகுதியில் உள்ள வீடு ஒன்றை விசேட அதிரடிப்படையினர் இன்றையதினம் காலை சோதனையிட்டுள்ளனர்.

இதன்போது குறித்த வீடடில் இருந்து 402 ஐபோன், 17,400 சிம் காட்கள், 60 ரௌட்டர்கள் உட்பட சில தொடர்பாடல் உபகரணங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. குறித்த வீட்டில் தங்கியிருந்த 2 இலங்கையர்கள் மற்றும் சீன நாட்டவர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். Read more

கிளிநொச்சி, தம்பகாமம், வண்ணாங்கேணி வடக்கு பகுதியில் ஆராதி நகர், சஞ்சீவி நகர் மாதிரி கிராமம் இன்றுகாலை 9மணியளவில் அமைச்சர் சஜித் பிரேமதாசவால் திறந்து வைக்கப்பட்டது.

தேசிய வீடமைப்பு அதிகார சபையின் செமட்ட செவன வேலைத் திட்டத்தின் கீழ் இன்று கிளிநொச்சி தம்பகாமம், வண்ணாங்கேணி வடக்கு பகுதியில் ஆராதி நகர், சஞ்சீவி நகர் கிராமங்கள் அமைச்சர் சஜித் பிரேமதாசவால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவில் உள்ள தம்பகாமம், வண்ணாங்கேணி வடக்கு பகுதியில் குறித்த திட்டத்தின்கீழ் மாதிரி கிராமங்கள் இரண்டு அமைக்கப்பட்டு 32 பயனாளிகளிற்கான காணி உரிமங்கள் கையளிக்கப்பட்டன. Read more