ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்) இன் ஒன்பதாவது பொதுச்சபைக் கூட்டம் 22.06.2019 சனி மற்றும் 23.06.2019 ஞாயிறு ஆகிய இரு தினங்கள் வவுனியா உமாமகேஸ்வரன் வீதி சந்தியில் அமைந்துள்ள ஆதி திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
ஆரம்ப நிகழ்வாக கட்சியின் ஸ்தாபகர் அமரர். க. உமாமகேஸ்வரன் அவர்களின் நிகழ்வில்லத்தில் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றதை தொடர்ந்து கட்சியின் வவுனியா மாவட்ட இணைப்பாளரும் பொதுச்சபை ஏற்பாட்டுக்குழு தலைவருமான திரு.க.சந்திரகுலசிங்கம் (மோகன்) அவர்களால் வரவேற்புரை நிகழ்த்தப்பட்டது. Read more