Header image alt text

ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்) இன் ஒன்பதாவது பொதுச்சபைக் கூட்டம் 22.06.2019 சனி மற்றும் 23.06.2019 ஞாயிறு ஆகிய இரு தினங்கள் வவுனியா உமாமகேஸ்வரன் வீதி சந்தியில் அமைந்துள்ள ஆதி திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

ஆரம்ப நிகழ்வாக கட்சியின் ஸ்தாபகர் அமரர். க. உமாமகேஸ்வரன் அவர்களின் நிகழ்வில்லத்தில் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றதை தொடர்ந்து கட்சியின் வவுனியா மாவட்ட இணைப்பாளரும் பொதுச்சபை ஏற்பாட்டுக்குழு தலைவருமான திரு.க.சந்திரகுலசிங்கம் (மோகன்) அவர்களால் வரவேற்புரை நிகழ்த்தப்பட்டது. Read more

நல்லதொரு நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டுமாயின், அரசமைப்பின் 18, 19ஆவது திருத்தங்களை முற்றாக நீக்குவது சிறந்ததென, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் 40ஆவது வருட நிறைவுக் கொண்டாட்டம், கொழும்பிலுள்ள பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று (23) இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.