Header image alt text

தமிழரசுக் கட்சியின் 16ஆவது தேசிய மாநாடு இன்று (30.06.2019) யாழ். வீரசிங்கம் மண்டபத்தின் இராசமாணிக்கம் அரங்கில் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் நடைபெற்றது.

ஆரம்ப நிகழ்வாக தந்தை செல்வாவின் உருவச்சிலைக்கு மலர்மாலை அணிவித்து தந்தை செல்வா சதுக்கத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து மாநாட்டு மண்டபத்தில் மங்கல விளக்கேற்றல் இடம்பெற்றது. இதனைத் தொடர்ந்து வரவேற்புரை இடம்பெற்று, கலாச்சார நிகழ்வுகள் இடம்பெற்றன. அடுத்து, தமிழரசுக் கட்சி மாநாட்டு தீர்மானங்கள் வாசிக்கப்பட்டு தெளிவுபடுத்தப்பட்டது. தொடர்ந்து தமிழரசுக் கட்சித் தலைவர், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் மற்றும் விருந்தினர்களின் உரைகள் இடம்பெற்றன. Read more

யாழ். மானிப்பாய் டச் ரோட் ஐந்தாம் வீதி நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களால் ஒதுக்கீடு செய்யப்பட்ட கிராம எழுச்சி விசேட நிதியான 20லட்சம் ரூபாயில் புனரமைப்புச் செய்யப்பட்டுள்ளது.

நேற்றுமாலை 6.00மணியளவில் இவ்வீதியினை நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் திறந்துவைத்தார். இந்நிகழ்வில் முன்னாள் பிரதேசசபை உறுப்பினர் கௌரிகாந்தன், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன், வலி தென்மேற்கு பிரதேசசபையின் உபதவிசாளர் கணேசவேல், Read more

யாழ். மானிப்பாய் டச் ரோட் ஆறாம் வீதிக்கான புனரமைப்பு வேலைகள் நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.

நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களால் ஒதுக்கீடு செய்யப்பட்ட கிராம எழுச்சி விசேட நிதியான 5லட்சம் ரூபாய் மூலம் மேற்படி வீதிக்கான புனரமைப்புப் பணிகள் நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன. நேற்றுமாலை 5.30மணியளவில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன், முன்னாள் பிரதேசசபை உறுப்பினர் கௌரிகாந்தன், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன், வலி தென்மேற்கு பிரதேசசபையின் உபதவிசாளர் கணேசவேல், Read more

யாழ். நவாலி வடக்கு குதனை ஒழுங்கைக்கான இரண்டாம் கட்ட புனரமைப்பு வேலைகள் நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டன. நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களால் ஒதுக்கீடு செய்யப்பட்ட கிராம எழுச்சி விசேட நிதியான 15லட்சம் ரூபாய் மூலம் மேற்படி வீதிக்கான புனரமைப்புப் பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன.

நேற்றுமாலை 5.00மணியளவில் இடம்பெற்ற இந்நிகழ்வில் முன்னாள் பிரதேசசபை உறுப்பினர் கௌரிகாந்தன், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன், வலி தென்மேற்கு பிரதேசசபையின் உபதவிசாளர் கணேசவேல், முன்னாள் ஆசிரியர் செல்வராஜா மற்றும், பயனாளிகள், ஊர்மக்கள், நலன்விரும்பிகள் என பலர் கலந்துகொண்டிருந்தார்கள். Read more

யாழ். நவாலி அட்டகிரி கந்தசாமி ஆலய சுற்றுவீதி நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களால் ஒதுக்கீடு செய்யப்பட்ட கிராம எழுச்சி விசேட நிதியான 20லட்சம் ரூபாயில் புனரமைப்புச் செய்யப்பட்டுள்ளது.

நேற்றுமாலை 4.30மணியளவில் இவ்வீதி புனரமைப்பினை நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டிருந்தார். இந்நிகழ்வில் முன்னாள் பிரதேசசபை உறுப்பினர் கௌரிகாந்தன், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன், வலி தென்மேற்கு பிரதேசசபையின் உபதவிசாளர் கணேசவேல், முன்னாள் ஆசிரியர் செல்வராஜா மற்றும் ஆலய நிர்வாகத்தினர், பொதுமக்கள் கலந்துகொண்டிருந்தார்கள்.
Read more

யாழ். மானிப்பாய் ஐந்தாம் கட்டை ஒழுங்கைக்கான புனரமைப்புப் பணிகள் நேற்றையதினம் (29.06.2019) ஆரம்பித்து வைக்கப்பட்டன. மேற்படி பள்ளமான வீதிக்கு தார் மற்றும் சீமெந்து போடப்படுகின்றது.

நீண்டகாலமாக இப்பாதை வெள்ளவாய்க்காலாய் இருந்தமையால் மழை காலங்களில் இப்பகுதி மக்களின் போக்குவரத்துக்கு மிகவும் சிரமமாக இருந்தது. இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களால் ஒதுக்கீடு செய்யப்பட்ட கிராம எழுச்சி விசேட நிதியான 15லட்சம் ரூபாய் மூலம் மேற்படி வீதிக்கான புனரமைப்புப் பணிகள் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது. Read more