யாழ். மானிப்பாய் டச் ரோட் ஐந்தாம் வீதி நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களால் ஒதுக்கீடு செய்யப்பட்ட கிராம எழுச்சி விசேட நிதியான 20லட்சம் ரூபாயில் புனரமைப்புச் செய்யப்பட்டுள்ளது.

நேற்றுமாலை 6.00மணியளவில் இவ்வீதியினை நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் திறந்துவைத்தார். இந்நிகழ்வில் முன்னாள் பிரதேசசபை உறுப்பினர் கௌரிகாந்தன், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன், வலி தென்மேற்கு பிரதேசசபையின் உபதவிசாளர் கணேசவேல், முன்னாள் ஆசிரியர் செல்வராஜா மற்றும் ஆலய நிர்வாகத்தினர், பெருமளவு இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டிருந்தார்கள். தொடர்ந்து ஆலயத்தில் விசேட பொதுக்கூட்டமும் நடைபெற்றது.