Header image alt text

விழிநீர் அஞ்சலி – அமரர் ராமலிங்கஐயர் செல்லையா வல்லிபுரம் அவர்கள்-

வவுனியா ஓமந்தை பன்றிக்கெய்தகுளத்தை பிறப்பிடமாகவும், வவுனியா கோயில்புதுக்குளத்தை வாழ்விடமாகவும் கொண்ட ராமலிங்கஐயர் செல்லையா வல்லிபுரம் அவர்கள் நேற்று (28.06.2019) இயற்கை எய்தினார் என்பதை மிகுந்த துயருடன் அறியத்தருகின்றோம்.

அன்னார் கழகத்தின் சிரேஸ்ட உறுப்பினர் அமரர் தோழர் வல்லிபுரம் உதயகுமாரசிங்கம் (கிளியன்) அவர்களின் அன்புத் தந்தையாவார். அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர், உறவினர்களோடு தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினராகிய நாமும் இப்பெருந்துயரினை பகிர்ந்துகொண்டு, எமது அஞ்சலியைச் சமர்ப்பிக்கின்றோம்.

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (PLOTE)
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (DPLF) 

(அன்னாரின் இறுதிக் கிரியைகள் நாளை காலை 10.மணியளவில் கோயில்புதுக்குளத்தில் இடம்பெறவுள்ளது.)

தென்மராட்சி சம்பாவெளி கெற்பேலி ஸ்ரீ செம்பவலஞ்சுளிப்பிள்ளையார் தேவஸ்தான அறநெறி பாடசாலையின் அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் நேற்றையதினம் (28.06.2019) இடம்பெற்றது.

நிகழ்வின் பிரதம விருந்தினரான புளொட் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும், சிறப்பு விருந்தினராக தென்மராட்சி பிரதேச சபையின் உப தவிசாளர் செ.மயூரன், கௌரவ விருந்தினர்களாக முன்னாள் மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன், சமூக சேவையாளர் கிருஸ்ணபிள்ளை, முன்னாள் நகரசபை உறுப்பினர் கிசோர் ஆலய நிர்வாகத்தினர், அறநெறிப் பாடசாலயின் ஆசிரியர், நிர்வாகத்தினர், அறநெறிப் பாடசாலைப் பிள்ளைகள் மற்றும் பெற்றோர் கலந்துகொண்டிருந்தார்கள்.
Read more

பலாலி விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் பிரிதி அமைச்சர் அசோக் அபேசிங்க நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

சிவில் விமான சேவைகள் சட்டத்தின் கீழ் கட்டளைகள் தொடர்பிலான விவாதத்தை ஆரம்பித்து வைத்து பிரதி அமைச்சர் உரையாற்றினார். இந்த பணிக்காக பலாலி விமான நிலையம் நவீனமயப்படுத்தப்படும். இதற்கான நடவடிக்கைகள் அடுத்த மாதம் 5 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட இருப்பதாகவும் பிரதி அமைச்சர் குறிப்பிட்டார். Read more