Header image alt text

யாழ். ஸ்கந்தவரோதயாக் கல்லூரியின் 125ஆவது ஆண்டு விழா 06.06.2019 வியாழக்கிழமை கல்லூரியின் அதிபர் திரு. செல்வஸ்தான் தலைமையில் இடம்பெற்றது.

நிகழ்வின் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் கலந்து கொண்டிருந்ததோடு, ஸ்கந்தவரோதயன்கள் பலரும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டிருந்தார்கள். ஆரம்ப நிகழ்வாக ஆலய வழிபாடு இடம்பெற்று விருந்தினர்கள் கௌரவித்து அழைத்துவரப்பட்டதோடு, மங்கள விளக்கேற்றல் இடம்பெற்றது. Read more

பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் கிராம எழுச்சித் திட்ட நிதியொதுக்கீட்டின் ஊடாக

யாழ். உடுவில் பிரதேச சபைக்குட்பட்ட கிராமங்களைச் சேர்ந்த 70 குடும்பங்களின் பயனாளிகளுக்கு மின்சார வசதி மற்றும் வீடுகளுக்கான மின் இணைப்பு செய்வதற்கான காசோலைகள் 06.06.2019 வியாழக்கிழமை அன்று கையளிக்கப்பட்டது. இந் நிகழ்வில் புளொட் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான த. சித்தார்த்தன் அவர்களுடன், பிரதேச செயலாளர் ஜெயகாந்த், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன், வலிதெற்கு பிரதேசசபை தவிசாளர் தர்சன், பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்பாளர் ர.யுகராஜ், பிரதேச செயலக அதிகாரிகள், உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டிருந்தார்கள். Read more

யாழ். நல்லூர் மங்கையர்க்கரசி வித்தியாலயத்தில் கடந்த 06.06.2019 வியாழக்கிழமை அன்று நவீன கற்றலுக்கான திறனாய்வு வகுப்பறை (Smart Class Room) புளொட் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களால் திறந்துவைக்கப்பட்டது.

வித்தியாலயத்தின் அதிபர் கஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் விருந்தினர்களாக பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன், யாழ். கல்வி வலய பிரதிக் கல்விப்பணிப்பாளர் ரவிச்சந்திரன், நல்லூர் கோட்டக் கல்விப்பணிப்பாளர் அன்ரன், Read more