Header image alt text

கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த, அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்லவின் அலுவலக பணியாளர் மூவர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதியின் பெயரைக் குறிப்பிட்டு, இனங்களுக்கிடையில் முரண்பாடுகளைத் தோற்றுவிக்கும் வகையில், 639 கடிதங்களுடன் மே 2ஆம் திகதி கொழும்பு மத்திய தபால் திணைக்களத்தில் வைத்து சந்தேகநபர்கள் மூவர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டனர். Read more

குருநாகல் போதனா வைத்தியசாலையின் மகப்பேற்று வைத்தியர் ஷாபிக்கு எதிராக, சட்ட நடவடிக்கை எடுக்குமாறு தெரிவித்து, அரசாங்கத்துக்கு அழுத்தம் தெரிவிக்கும் வகையில்,

அக்மீமன பிரதேச சபையின் உப தவிசாளர் ஏ.கே. சுகத் உள்ளிட்டவர்கள் இன்று காலை எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர். அக்மீமன பிரதேச சபையின் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்பினர்களும் இவ் ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்கொண்டிருந்தனர். Read more

வவுனியா மாவட்டத்தில் நிலவிவரும் கடும் வரட்சியின் காரணமாக நீர்நிலைகளில் மீனினங்கள் இறந்து கரையொதுங்குகின்றமையை காணமுடிகின்றது.

இந்நிலையில், வவுனியா மூனாமடு குளத்தில் ஏராளமானளவில் மீன்கள் இறந்து கரையொதுங்கியுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர். வவுனியா மாவட்ட பொதுசுகாதார அலுவலகத்துக்கு தகவல் வழங்கப்பட்ட போது, Read more

நாளை நள்ளிரவிலிருந்து இரு நாள்களுக்கு ரயில் பணிப்புறக்கணிப்பை முன்னெப்பதற்கு, 5 ரயில் தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன.

ஓய்வூதியக் கொடுப்பனவு உள்ளிட்ட பல காரணங்களை முன்வைத்து, இந்தப் பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாகதெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரம் உயர்த்தக்கோரி கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு முன்பாக நேற்று ஆரம்பிக்கப்பட்ட உணவுத்தவிர்ப்பு போராட்டம் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.

கல்முனை சுபத்திரா ராமய விகாராதிபதி ரன்முத்துகல சங்கரத்ன தேரர் தலைமையில் கிழக்கிலங்கை இந்து குருமார் ஒன்றியத் தலைவர் சிவஸ்ரீ கே.கே. சச்சிதானந்தசிவம் குருக்கள், கல்முனை மாநகரசபை உறுப்பினர்களான அழகக்கோன் விஜயரெட்னம், சந்திரசேகரம் ராஜன் ஆகியோர் இந்த உணவுதவிர்ப்பு போராட்டத்தை நடத்துகின்றனர். Read more