Header image alt text

அம்பாறை – கல்முனை வடக்கு தமிழ் உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக் கோரி ஆரம்பிக்கப்பட்ட சாகும் வரையான உண்ணாவிரதப் போராட்டம் இன்று மூன்றாவது நாளாகவும் முன்னெடுக்கப்படுகின்றது.

கல்முனை வடக்கு தமிழ் உப பிரதேச செயலகத்திற்கு முன்பாக கடந்த திங்கட்கிழமை முதல் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்தும் வரை தங்களின் உண்ணாவிரதப் போராட்டம் தொடரும் என உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளோர் தெரிவித்தனர். Read more

இன்று நள்ளிரவு முதல் மேற்கொள்ள திட்டமிட்டிருந்த வேலை நிறுத்த போராட்டத்தை தற்காலிகமாக கைவிடுவதாக புகையிரத தொழிற்சங்க சம்மேளனம் கூறியுள்ளது.

சம்பளப் பிரச்சினை கோரிக்கையை முன்வைத்து வேலை நிறுத்தம் செய்ய புகையிரத தொழிற்சங்க சம்மேளனம் தீர்மானித்திருந்தது. புகையிரத தொழிற்சங்க பிரதிநிதிகள் மற்றும் போக்குவரத்து அமைச்சர் அர்ஜூன ரணதுங்க ஆகியோருக்கு இடையான சந்திப்பு இன்று காலை போக்குவரத்து அமைச்சில் இடம்பெற்றிருந்தது. Read more

பாடசாலை மாணவர்களை ஏற்றிச்சென்ற முச்சக்கரவண்டியும் பஸ்ஸ_ம் நேருக்கு நேர் மோதியதில் பாடசாலை மாணவர்கள் நான்கு பேர் உட்பட ஐவர் காயமடைந்து வவுனியா பொது வைத்தியாசலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வவுனியா பகுதியிலிருந்து பாடசாலை முடிவடைந்து மாணவர்களை ஏற்றியவாறு கோவில்குளம் சென்ற முச்சக்கரவண்டியும் சிதம்பரபுரத்திலிருந்து வவுனியா நோக்கி பயணித்த தனியார் பஸ்ஸ_ம் கோவில்குளத்தில் நேருக்கு நேர் மோதியதிலேயே விபத்து ஏற்பட்டுள்ளது. Read more

ஜப்பானில் நடைபெறும் ஜி-20 உச்சி மாநாட்டிற்கு ஜனாதிபதி டொனால்ட் ஜே. ட்ரம்புடன் பயணித்தல் உள்ளிட்ட சில காரணங்களுக்காக அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக்கேல் ஆர். போம்பேயோயின் இலங்கைக்கான விஜயம் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கொழும்பில் உள்ள ஐக்கிய அமெரிக்க தூதரகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இம்முறை கொழும்புக்கு விஜயம் செய்ய முடியாமல் போவதையிட்டு செயலாளர் பொம்பேயோ தமது வருத்தத்தை வெளியிட்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. Read more

ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான கபீர் ஹாசிம் மற்றும் அப்துல் ஹலீம் ஆகியோர் மீண்டும் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டுள்ளனர். ஏற்கனவே தங்கள் இராஜினாமா செய்த அதே அமைச்சுக்களை அவர்கள் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளனர்.

அதன்படி கபீர் ஹாசிம் நெடுஞ்சாலைகள், வீதி அபிவிருத்தி, பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சராகவும் மற்றும் அப்துல் ஹலீம் தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் விவகார அமைச்சராகவும் பதவியேற்றுள்ளனர்.

போக்குவரத்து அமைச்சருடன் நடத்திய பேச்சுவார்த்தை வெற்றியளிக்காமையின் காரணமாக ஏற்கனவே திட்டமிட்டபடி இன்று நள்ளிரவு முதல் வேலை நிறுத்தம் செய்வதாக புகையிரத தொழிற்சங்க சம்மேளனம் தெரிவித்துள்ளது.

இரண்டு நாள் அடையாள வேலை நிறுத்தம் செய்யப் போவதாக சங்கம் குறிப்பிட்டுள்ளது. புகையிரத தொழிற்சங்க பிரதிநிதிகள் மற்றும் போக்குவரத்து அமைச்சர் அர்ஜூன ரணதுங்க ஆகியோருக்கு இடையான சந்திப்பு இன்று காலை போக்குவரத்து அமைச்சில் இடம்பெற்றது. Read more

குருணாகல் வைத்தியர் சாபி தொடர்பில் முன்னெடுக்கப்படுகின்ற விசாரணைகளுக்கு அமைவாக இதுவரை 758 நபர்களிடம் வாக்குமூலம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.

அவர்களில் 601 பெண்கள் உள்ளடங்குவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார். குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் இவ்வாறு வாக்குமூலம் பெறப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.