Header image alt text

இலங்கை விஜயத்தினை மேற்கொண்டிருந்த இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்றுபிற்பகல் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகளையும் சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.

இந்தியத் தூதரகத்தில் நடைபெற்ற இச் சந்திப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், மாவை சேனாதிராஜா, தர்மலிங்கம் சித்தார்த்தன், எம்.ஏ சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
Read more

தமிழ் – முஸ்லிம் மக்களின் ஆரோக்கியமான இன ஒற்றுமை, பரஸ்பர விட்டுக் கொடுப்பு மூலமே ஏற்படுமென பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளதுடன், இரு சமூகங்களுக்கும் இடையிலான சரியான புரிந்துணர்வே சிறுபான்மையினங்களின் பாதுகாப்புக்கு அடிப்படையான விடயமெனவும் தெரிவித்தார்.

அத்துடன் நாட்டின் ஜனாதிபதியாக எவர் வந்தாலும் ஜனாதிபதித் தேர்தல் சமயத்தில் எழுத்து மூலமோ அல்லது மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம் ஊடான ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டாலும் அவை நிறைவேற்றப்படாது என்பது வரலாறு என குறிப்பிட்ட அவர் எதிர்வரும் தேர்தலில் ஓரளவு நியாயமாக, சொன்னதை நிறைவேற்றக்கூடியவர் என கருதப்படக்கூடிய வேட்பாளர் யார் என ஆராய்ந்து கூட்டமைப்பு ஆதரவளிப்பது குறித்து முடிவு எடுக்குமெனவும் குறிப்பிட்டார்.

(ரொஷான் நாகலிங்கம்) Read more

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அழைப்பை ஏற்று இலங்கைக்கு வருகை தந்த இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு இன்று (09) நண்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.

ஜனாதிபதி செயலகத்திற்கு வருகை தந்த இந்திய பிரதமர் நரேந்திர மோடியை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மிகுந்த உற்சாகமாக வரவேற்றார். மரியாதை வேட்டுக்கள் மற்றும் இராணுவ அணிவகுப்பு மரியாதைகளுடன் இந்திய பிரதமருக்கான இந்த வரவேற்பு இடம்பெற்றது.
Read more

முல்லைத்தீவு – மல்லாவி ஆதார வைத்தியசாலை வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்ட சிறுநீரக நோய் சிகிச்சை நிலைய கட்டிடத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று திறந்து வைத்துள்ளார்.

முல்லைத்தீவு பொது விளையாட்டரங்கில் இருந்து இலத்திரனியல் முறை மூலம் இந்த கட்டிடத்தை திறந்து வைத்துள்ளார். சுகாதாரம் போசனை மற்றும் சுதேச வைத்திய அமைச்சின் தேசிய சிறுநீரக நோய் நிகழ்ச்சித்திட்டத்தின் மூலம் நிர்மாணிக்கப்பட்ட சிறுநீரக நோய் சிகிச்சை நிலையமே நேற்றைய தினம் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளது.