இலங்கை விஜயத்தினை மேற்கொண்டிருந்த இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்றுபிற்பகல் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகளையும் சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.

இந்தியத் தூதரகத்தில் நடைபெற்ற இச் சந்திப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், மாவை சேனாதிராஜா, தர்மலிங்கம் சித்தார்த்தன், எம்.ஏ சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.