சிறுபான்மை இனங்களுக்கிடையலான ஒற்றுமை என்பது முக்கியமானது. ஆனால் அத்தகைய ஒற்றுமை பரஸ்பரமானதாக இருக்க வேண்டும். மாறாக எப்போதும் தமிழ் மக்கள் மாத்திரமே விட்டுக்கொடுக்க வேண்டும் என எதிர்பார்ப்பது எந்தவகையில் நியாயமானது என்று கேள்வி எழுப்புகின்றார் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தருமலிங்கம் சித்தார்த்தன்.
அமைச்சர் றிஷாத்துக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என்பதே தமிழ் மக்களின் எதிர்பார்ப்பு என்றும் அவர் சொல்கின்றார். தினகரன் வாரமஞ்சரிக்கு வழங்கிய விஷேட நேர்காணலில் ஏப்ரல் 21ஆம் திகதியன்றைய தாக்குதல்களின் பின்னர், நாட்டிலும், தமிழர் அரசியலிலும் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் பற்றி விளக்குகின்றார்.
நேர்கண்டவர் தேவராசா விருஷன் Read more