Header image alt text

த.வினோயித்

தமிழ் சமூகத்தில் தாய் மாமனுக்கு ஒரு அந்தஸ்த்து உள்ளது. அந்த அர்த்தத்தில்தான் தமிழ்தேசிய கூட்டமைப்பு மாமா வேலை பார்க்கிறது என முன்னாள் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் கூறினாரா?

என கேள்வி எழுப்பியிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் அதற்கு வேறு அர்த்தங்கள் உள்ளதா? என்பது தொடர்பாக தனக்கு தெரியவில்லை எனவும் உண்மையில் மாமா வேலை என்ற கருத்தையே தன்னால் சரியாக விளங்கிக் கொள்ள முடியவில்லை. எனவும் தெரிவித்தார்.

சமகால அரசியல் நிலைமைகள் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன் இல்லத்தில் நேற்று புதன்கிழமை காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு தெரிவித்த அவர் இதன்போது மேலும் கூறுகையில், Read more

வடக்கு மற்றும் கிழக்கு மாகாண பாடசாலைகளில் தொண்டர் அடிப்படையில் சேவையாற்றிய ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்வு இன்று திருகோணமலையில் நடைபெற்றது.

திருமலை இந்து கலாச்சார மண்டபத்தில் தேசிய கொள்கைகள் பொருளாதார விவகாரங்கள் மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வளிப்பு வட மாகாண அபிவிருத்தி மற்றும் இளைஞர் விவகாரங்களுக்கான அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இந்நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்பட்டது. Read more

தென்னாபிரிக்க ஜனாதிபதி சிறில் ரம்போசா குறுகிய விஜயத்தை மேற்கொண்டு இன்று இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார். ஜி 20 அமைப்பில் கலந்துக்கொள்வதற்காக ஜப்பான் சென்ற வழியில் அவர் இலங்கைக்கு வந்துள்ளார்.

தென்னாபிரிக்க ஜனாதிபதியுடன் 20 பேரைக் கொண்ட குழுவினர் இலங்கை வந்துள்ளனர். இந்த குழுவினரை வரவேற்பதற்காக பிரதமர் ரணில் விக்கரமசிங்க மற்றும் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு சென்றிருந்தனர். Read more

மரண தண்டனையை மீள அமுலாக்குவதற்கு இலங்கை பரிசீலித்து வருவதாக வெளியான தகவல் குறித்து தாம் ஆழ்ந்த கவலையடைவதாக கனடா தெரிவித்துள்ளது.

இலங்கையில் உள்ள கனேடிய தூதரகம் இன்று விடுத்துள்ள செய்திக் குறிப்பில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. எல்லா விடயங்களிலும் மரண தண்டனையைப் பயன்படுத்துவதை தாங்கள் கடுமையாகவும் சந்தேகத்திற்கு இடமின்றியும் எதிர்ப்பதாகவும் கனடா தெரிவித்துள்ளது.

சட்டவிரோதமான முறையில் கடல் மார்க்கமாக இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வர முயற்சித்த மூன்று பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நெடுந்தீவு குவிந்தகாடு கடற்பிரதேசத்தில வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படை கூறியுள்ளது. மீன்பிடி படகுமூலம் இலங்கைக்கு வந்துள்ளதுடன், கைது செய்யப்பட்ட மூன்று பேரும் வவுனியாவைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. Read more

அரச அலுவலகங்களில் அரச உத்தியோகத்தர்கள் அணிய வேண்டிய ஆடை சம்பந்தமான புதிய சுற்றறிக்கை பொது நிர்வாகம் மற்றும் இடர் முகாமைத்துவ அமைச்சின் செயலாளரால் வெளியிடப்பட்டுள்ளது.

2019.05.29 அன்று வெளியிடப்பட்ட சுற்றறிக்கையை திருத்தம் செய்ய கடந்த அமைச்சரவை கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டது. அதன்படி நேற்று புதிய சுற்றறிக்கை குறித்த அமைச்சின் செயலாளரின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ளது. Read more

ஏற்கனவே திட்டமிட்டபடி இன்று நள்ளிரவு முதல் இரண்டு நாள் வேலை நிறுத்தம் செய்யப் போவதாக புகையிரத தொழிற்சங்கம் அறிவித்துள்ளது. முன்னதாக சம்பள முரண்பாடு உள்ளிட்ட சில பிரச்சினைகளுக்கு அதிகாரிகள் தீர்வு வழங்காமையின் காரணமாக போராட்டத்தில் ஈடுபடுவதாக அவர்கள் கூறியுள்ளனர்.

ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை நள்ளிரவு முதல் வேலை நிறுத்தம் செய்ய கடந்த வாரம் புகையிரத தொழிற்சங்கம் தீர்மானித்தது. எவ்வாறாயினும் ரயில் சேவையை அத்தியாவசிய சேவையாக பிரகடனம் செய்த பின் வேலைநிறுத்தம் செய்யும் புகையிரத ஊழியர்களுக்கு எதிராக அவசரகால சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கமுடியும் என போக்குவரத்து பிரதியமைச்சர் அசோக அபேசிங்க கூறியுள்ளார்.

குடிவரவு- குடியகல்வு திணைக்களத்தின் புதிய பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ள பசன் ரத்னாயக்க இன்று தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

2017ஆம் ஆண்டிலிருந்து குடிவரவு- குடியகல்வு திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளராகக் கடமையாற்றிய இவர், இலங்கை நிர்வாக சேவையின் சிரேஸ்ட அதிகாரியாவார். இதற்கு முன்னர் மத்திய மாகாண கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர், மத்திய மாகாண கலாசார அலுவல்கள் பணிப்பாளர், உடுநுவர பிரதேச செயலாளராகவும் ஹரிஸ்பத்துவ பிரதேச செயலாளராகவும் பதவி வகித்துள்ளார் என்பது இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

மட்டக்களப்பு, ஒல்லிக்குளம் பகுதியில் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளினால் நிலத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த 300 ஜெலக்நைட்கள், ஆயிரம் டெடனைட்டர்கள் என்பவை குற்றத்தடுப்பு பிரிவினரால் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டார தகவல்கள் கூறுகின்றன.

கடந்த ஏப்ரல் 21ம் திகதி தற்கொலை குண்டு தாக்குதலுடன் தொடர்புடைய சஹ்ரானின் இரண்டாம் கட்ட தளபதியான சவுதி அரேபியாவில் கைது செய்யப்பட்டு இலங்கைக்குக் கொண்டுவரப்பட்ட மில்ஹான் என்பவரிடம் சி.ஐ.டியினர் மேற்கொண்ட விசாரணையில், Read more