யாழ். அச்சுவேலி மேற்கு செல்வநாயகபுரம் கிராமத்தின் 51ஆவது ஆண்டு விழாவும், தந்தை செல்வா சனசமூக நிலைய வீதி திறப்பும், மின் கட்டமைப்பு வழங்கலும் இன்றுமாலை நடைபெற்றது.
இதன்கீழ் அச்சுவேலி மேற்கு செல்வநாயகபுரம் கிராமத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களால் ஒதுக்கீடு செய்யப்பட்ட கிராம எழுச்சி விசேட நிதிமூலம் மேற்படி பூரணப்படுத்தப்பட்ட அபிவிருத்தித் திட்டங்களை திறந்துவைக்கும் நிகழ்வு இடம்பெற்றது. 5.5மில்லியன் ரூபா பெறுமதியான வேலைத்திட்டங்கள் இந்த கிராமத்தில் மாத்திரம் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது. மைதானம் புனரமைக்கப்பட்டு, மின்சார வசதி வழங்கப்பட்டதோடு, சனசமூக நிலைய வீதியும் புனரமைப்பு செய்யப்பட்டுள்ளது. Read more
யாழ். சில்லாலை சாந்தை வீரபத்திரர் ஆலய அன்னதான மண்டபத்திற்கான அத்திரவாரக்கல் நாட்டும் வைபவம் இன்றுபிற்பகல் இடம்பெற்றது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியதை போன்று, அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தச் சட்டத்தில் பாரிய சர்ச்சைகள் காணப்படுவதை தான் ஏற்றுக் கொள்வதாக ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஜயம்பத்தி விக்ரமரத்ன தெரிவிக்கின்றார்.
வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ள வெளிநாட்டு அகதிகளுக்கான போடப்பட்டிருந்த இராணுவ பாதுகாப்பு நேற்றில் இருந்து விலக்கப்பட்டுள்ளது.
இயற்கை அனர்த்தங்களை எதிர்கொள்ளக்கூடிய வல்லமையை காலநிலை மாற்றம் மற்றும் வாழ்வாதாரங்கள் பன்முகப்படுத்தல் மூலம் கட்டியெழுப்புவதற்காக தென்கொரியா 6 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கை அரசாங்கத்திற்கு வழங்கவுள்ளது.
கிளிநொச்சியில் நேற்றுமாலை 3.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் 27 வயதான குடும்பஸ்தர் ஒருவர் பலியாகியுள்ளார். விபத்தில் இராமநாதன் கமம் கோவிந்தன்கடை சந்தி மருதநகர் பகுதியை சேர்ந்த செல்லையா பிரபாகரன் என்பவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.