எல்பிட்டிய பிரதேச சபை தேர்தல் இன்று காலை 7 மணிமுதல் மாலை 4 மணிவரை நடைபெற்று நிறைவடைந்துள்ளது. 47 வாக்களிப்பு நிலையங்களில் இடம்பெற்ற வாக்களிப்பில் காலை 7மணிமுதல் மாலை 4மணிவரை 72 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.
வாக்களிப்பு நடவடிக்கைகள் மிக வெற்றிகரமாக இடம்பெற்றதாக காலி மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகர் சோமரத்ன விதாரபத்திரன தெரிவித்துள்ளார். இந்த தேர்தலில் 53,384 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். Read more
ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் ஒக்டோபர் 8 ஆம் திகதியில் இருந்து இதுவரை 269 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
2019 ஆம் ஆண்டிற்கான ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக 35 வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். எனினும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியை சேர்ந்த 19 வேட்பாளர்களும், சுயேட்சையாக 19 வேட்பாளர்களும் மற்றும் வேறு கட்சிகளை சேர்ந்த 3 வேட்பாளர்களுமாக 41 பேர் கட்டுப்பணம் செலுத்தியிருந்தனர்.
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் செயன்முறை பரீட்சைக்குத் தோற்றவுள்ள விண்ணப்பதாரிகளின் தேசிய அடையாள அட்டை தொடர்பிலான விசாரணைகளுக்கு விசேட தொலைப்பேசி இலக்கம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
கொழும்பு யுனியன் பிரதேசத்தில் உள்ள உணவகம் ஒன்றில் 33 வது மாடியில் இருந்து வீழ்ந்து அவுஸ்திரேலியா பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்றுகாலையில் இச்சம்பவம் இடம்பெற்றிருக்கின்றது.
மட்டக்களப்பு – பொலன்னறுவை ரயில் வீதியின் ரயில் போக்குவரத்து தொடர்ந்தும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மட்டக்களப்பில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ´மீனகயா´ ரயில் நேற்று இரவு வெலிகந்த மற்றும் மனம்பிட்டியவிற்கு இடையிலான பிரதேசத்தில் தடம்புரண்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
வவுனியா நெடுங்கேணி பட்டிக்குடியிருப்பில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.