Header image alt text

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள நியூசிலாந்து நீதி அமைச்சர் என்ரூ லிட்டுலுக்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.

கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள அலரிமாளிகையில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் பல்வேறு முக்கிய விடயங்கள் கலந்துரையாடப்பட்டதாக பிரதமரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. Read more

சென்னைக்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையிலான எயார்லையன்ஸ் விமானசேவைகள் நவம்பர் 11 முதல் ஆரம்பமாகிறது. இவ் விமானசேவைகள் திங்கள், புதன் மற்றும் சனிக்கிழமைகளில் சேவைகளில் ஈடுபடவுள்ளன.

இதன்படி சென்னையில் இருந்து முற்பகல் 10.35க்கு புறப்படும் விமானம் யாழ்ப்பாணத்துக்கு பகல் 11.45க்கு தரையிறங்கும். பின்னர் சென்னைக்கு பிற்பகல் 2.10க்கு சென்றடையும். இந்தசேவைகள் ஒக்டோபர் 17ஆம் திகதி ஆரம்பித்து வைக்கப்பட்டன. Read more

வவுனியாவில் மின்சார சபை ஊழியர்கள் ஆறு பேர் தாக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து வவுனியா மின்சாரசபை ஊழியர்கள் இன்றுகாலை பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

வவுனியா ஆச்சிபுரம் பகுதிக்கு நேற்றுமாலை தொழில் நிமித்தம் சென்ற மின்சாரசபை ஊழியர்கள் மீது அங்கிருந்த ஒரு குழுவினரால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் மின்சாரசபை ஊழியர்கள் அறுவர் படுகாயடைந்து வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். Read more

மிலேனியம் சலேஞ்ச் கோர்ப்பரேஷன் ((Millennium Challenge Corporation – MCC) உடன் இலங்கை இன்று கைச்சாத்திடவுள்ள ஒப்பந்தத்தில் கைச்சாத்திட வேண்டாம் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், ஜனாதிபதி தலையிட்டு ஒப்பந்தம் கையெழுத்திடப்படுவதைத் தடுக்க வேண்டுமென தெரிவித்து அறிக்கை ஒன்றினை இன்று வெளியிட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

மிலேனியம் சலேஞ்ச் கோர்ப்பரேஷன் (MCC) ஒப்பந்தத்துக்கு எதிர்ப்பு வெளியிட்டு உண்ணாவிரத போராட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

வண. உடுதும்பர காஷ்யப்ப தேரர், கொழும்பிலுள்ள சுதந்திர சதுக்கத்தில் இந்த உண்ணாவிரத போராட்டத்தை இன்று காலை முதல் முன்னெடுத்துள்ளார். அமெரிக்காவுடன் குறித்த ஒப்பந்தத்தில் இலங்கை அரசாங்கம் கையெழுத்திடக்கூடாது என்று தெரிவித்தே தேரர் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

ஜனாதிபதி தேர்தலுக்காக அரசாங்க அச்சக பிரிவினால் அச்சிடப்பட்ட வாக்காளர் சீட்டுக்களை தேர்தல் ஆணைக்குழுவிடம் கையளிக்கும் நடவடிக்கை இன்றுடன் நிறைவடைவதாக அரச அச்சக பிரிவின் தலைமை அதிகாரி கங்கானி கல்பனா லியனகே தெரிவித்தார்.

நேற்று இந்த நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டிருந்ததுடன் இன்றுடன் அதனை நிறைவுக்கு கொண்டுவர உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இம்முறை ஜனாதிபதி தேர்தலுக்காக 1 கோடியே 70 இலட்சத்திற்கு மேற்பட்ட வாக்காளர் சீட்டுகள் அச்சிடப்பட்தாகவும் அவர் தெரிவித்துள்ளார். Read more

ஜனாதிபதி தேர்தலுடன் தொடர்புடைய 2867 முறைப்பாடுகள் இதுவரை பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கடந்த 08 ஆம் திகதி தொடக்கம் நேற்று வரை குறித்த முறைப்பாடுகள் கிடைத்துள்ள நிலையில்,

தேர்தல் விதி மீறல்கள் தொடர்பில் 2748 முறைப்பாடுகளும், வன்முறை சம்பவங்கள் தொடர்பில் 24 முறைப்பாடுகளும் மற்றும் 95 வேறு முறைப்பாடுகளும் பதிவாகியுள்ளன. Read more