Header image alt text

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமல் ஆக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களுக்கு எதிராக கொழும்பு விசேட மூவரடங்கிய மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, 9 பேருக்கு எதிராக இந்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதுடன், சந்தேகநபர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து, இந்த வழக்கு எதிர்வரும் 18ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. Read more

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதுவர் ஆகியோர் இன்று சந்தித்து கலந்துரையாடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சுவிட்சர்லாந்து தூதரக பணியாளர் ஒருவர் கடத்தப்பட்டு விடுவிக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் கலந்துரையாட இந்த சந்திப்பு இடம்பெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. Read more

யாழ்தேவி ரயில் தடம்புரண்டதால் வடக்கிற்கான ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கல்கமுவ – அம்பன்பொல ரயில் நிலையங்களுக்கிடையிலேயே குறித்த யாழ் தேவி ரயில் தடம்புரண்டுள்ளது. தடம்புரண்டுள்ள ரயில் பெட்டிகளை சீராக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். Read more

மட்டக்களப்பு – கல்முனை வீதியிலுள்ள கல்லடி பிரதேசத்தில், மோட்டார் சைக்கிள்கள் இரண்டு மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்ததுடன், இரு பொலிஸார் உட்பட மூவர் படுகாயமடைந்துள்ளனர் என காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கல்லடி, வேலூர் 4ஆம் குறுக்கு, காளி கோவில் வீதியைச் சேர்ந்த மீன் வியாபாரியான 61 வயதுடைய சவுந்தரராஜன் என்பவரே உயிரிழந்துள்ளார். Read more

மட்டக்களப்பு காத்தான்குடி கர்பலா கிராமத்தில், இரு பிள்ளைகளின் தந்தையான 47 வயதுடைய சுந்தலிங்கம் பரமேஸ்வரன் என்பவர் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கர்பலா சிவா வித்தியாலய வீதியிலுள்ள வீடொன்றின் பின்புறமாக இக் குடும்பஸ்தரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக, காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர். Read more

ஓமான் நாட்டுக்கு வீட்டு பணிப்பெண்களாக சென்று அந்நாட்டு வீட்டு உரிமையாளர்களால் பல்வேறு துன்பங்களுக்கு உள்ளாக்கப்பட்டு சம்பளம் வழங்கப்படாமல் பணிபுரிந்த இலங்கை பணிப்பெண்கள் 42 பேர் இன்று நாடு திரும்பியுள்ளனர்.

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக அவர்கள் நாட்டை வந்தடைந்துள்ளனர். இலங்கையின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த இவர்கள் இரண்டு வருடங்களுக்கு குறைவாக பணிபுரிந்த நிலையில் அதன் காரணமாக ஊதியம் வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. Read more

புதிய இராஜாங்க மற்றும் பிரதியமைச்சர்கள், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.

இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்கள் பதவியேற்கும் நிகழ்வு இன்றுமுற்பகல் ஆரம்பமானது. இதனையடுத்து, புதிய அமைச்சின் செயலாளர்கள் நியமனங்களும் இடம்பெறவிருந்தது.  Read more