Header image alt text

ஜனாதிபதி செயலகத்தில் இன்று முற்பகல் புதிய அமைச்சர்கள் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ முன்னிலையில் அமைச்சர்களாக பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.

நேற்று பிற்பகல் பிரதமராக நியனம் பெற்ற மஹிந்த ராஜபக்ஷ மத அனுஷ்டான நிகழ்வுகளுடன் அலரிமாளிகையில் தனது கடமை பொறுப்புக்களை பொறுப்பேற்றுக் கொண்டார். இந் நிலையில் இன்றைய தினம் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான இடைக்கால அமைச்சரவைக்கான உறுப்பினர்கள் 15 பேர் தமக்கான அமைச்சரவை நியமனக் கடிதங்களை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவிடமிருந்து பெற்றுக் கொண்டனர். Read more

இலங்கையிலுள்ள சகல பல்கலைக்கழகங்களிலும் பணிநிலை வெற்றிடங்களை நிரப்பும் பணிகள் அனைத்தும் மறு அறிவித்தல் வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பான அறிவித்தல் நேற்று மாலை சகல பல்கலைக்கழகங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நிதி அமைச்சின் திறைசேரிச் செயலாளரின் அறிவுறுத்தலுக்கு அமைவாக அனைத்து ஆட்சேர்ப்புப் பணிகளையும் தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மொஹான் டி சில்வா நேற்று மாலை அனுப்பி வைத்துள்ள கடிதத்தின் மூலம் அறிவுறுத்தியிருக்கிறார். Read more

பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன, பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்னவை சந்தித்துள்ளார்.

பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற குறித்த இச்சந்திப்பின் போது, பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி புதிதாக நியமிக்கப்பட்ட பாதுகாப்பு செயலாளருக்கு தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார். Read more

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவை இலங்கைக்கான சீன தூதுவர் ர்.நு. ஊhநபெ ஓரநலரயn சந்தித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் நேற்று முற்பகல் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இலங்கைக்கான சீன தூதரகத்தின் பிரதி தலைமை அதிகாரி ஹியூ வெய் (ர்ர றுநi) மற்றும் அரசியல்துறை பிரதானி லோ ச்சோங் (டுழர ஊhழபெ) ஆகியோரும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டிருந்தனர். Read more

வடக்கு கிழக்கு தவிர்ந்த ஆறு மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவால் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதற்கமைய, மேல் மாகாண ஆளுநராக, வைத்தியர் சீதா அரம்பேபொல, மத்திய மாகாணம் லலித் யூ கமகே, ஊவா மாகாணத்துக்கு ராஜா கொல்லுரேயும், தென் மாகாணத்துக்கு விலி கமகேயும் நியமிக்கப்பட்டுள்ளதுடன் ஏ.ஜே.எம். முஸம்மில் வடமேல் மாகாண ஆளுநராகவும் டிக்கிரி கொப்பேகடுவ சப்ரகமுவ மாகாண ஆளுநராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.