ஜெனீவாவில் நான்கு நாள் அமர்வை இன்று நிறைவு செய்துள்ள உயிரியல் ஆயுதங்கள் தொடர்பான சாசனத்திற்கான அரச தரப்பினர்களின் கூட்டத்தின் போது (MSP)), 2020 ஆம் ஆண்டில் நடைபெறவிருக்கும் அரச தரப்பினர்களின் கூட்டத்தின் தலைவராக இலங்கை ஏகமானதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

வெளிச்செல்லும் தலைவரான பிரான்சின் தூதுவர் யன் ஹ்வாங்கிடமிருந்து, 2020 அரச தரப்பினர்களின் கூட்டத்தின் தலைவராக ஜெனீவாவிலுள்ள ஐ.நா. விற்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதி தூதுவர் ஏ.எல்.ஏ. அஸீஸ் பொறுப்பேற்கின்றார். இந்த மாநாடு நடைமுறைக்கு வந்து, அடுத்த ஆண்டு 45 ஆண்டுகளைக் குறித்து நிற்பதனாலும், 2021 ஆம் ஆண்டில் நடைபெறவிருக்கும் ஒன்பதாவது மீளாய்வு மாநாட்டை நோக்கி தொடர்ச்சியான நிபுணர் கூட்டங்கள் மற்றும் ஆயத்தக் கூட்டங்களைக் கட்டமைப்பதற்காக 2020 ஆம் ஆண்டு முழுவதும் அரச தரப்பினர்கள் ஒன்று கூடுவதனாலும், உலகளாவியமயமாக்கல் மற்றும் தேசிய நடைமுறைப்படுத்தலில் தொடர்ச்சியான கவனம் செலுத்துவதோடு அதன் நோக்கங்களை முழுமையாக உணர்ந்து கொள்வதற்கு சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் உதவியை வலுப்படுத்த இலங்கையின் தலைமைத்துவம் மிகவும் முக்கியமானதாகும்.

உயிரியல் ஆயுதங்கள் தொடர்பான சாசனம் (BWC) என பிரபலமாக அறியப்படும் பக்டீரியாவியல் (உயிரியல்) மற்றும் நச்சு ஆயுதங்களின் அபிவிருத்தி, உற்பத்தி மற்றும் கையிருப்பு ஆகியவற்றை தடுப்பதற்கான சாசனம் உயிரியல் மற்றும் நச்சு ஆயுதங்களை அவற்றின் முழு சுழற்சியின் மூலமும் தடைசெய்வதுடன், இது பேரழிவுகளை ஏற்படுத்தும் ஆயுதங்களின் பெருக்கத்தை தடுப்பதற்கான சர்வதேச சமூகத்தின் முயற்சிகள் மற்றும் பெருகிவரும் நிலையற்ற உலகளாவிய சூழலில் தேசிய பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான அரச தரப்பினர்களின் முயற்சிகள் ஆகியவற்றின் ஒரு முக்கிய அங்கமாகும். (வெளிநாட்டு உறவுகள் அமைச்சு. கொழும்பு. 09 டிசம்பர் 2019.)