மத்திய கிழக்கு நாடுகளின் தூதுவர்களுக்கும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் இடையில் சந்திப்பொன்று இன்று முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.

புதிய அரசாங்கத்திற்கு தமது நாடுகளின் ஒத்துழைப்புகள் தொடர்ந்தும் கிடைக்கப்பெறுவதோடு பொருளாதார மற்றும் கலாசார நடவடிக்கைக்காக எதிர்காலத்தில் இலங்கைக்கு தேவையான ஒத்துழைப்புக்களை தாம் பெற்றுக்கொடுக்க எதிர்பார்ப்பதாகவும் மத்திய கிழக்கு நாடுகளின் தூதுவர்கள் ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளனர். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமைத்துவத்தின் கீழ் இலங்கைக்கும் தமது நாடுகளுக்குமிடையிலான தொடர்புகளை அனைத்து துறைகளிலும் பலப்படுத்த அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

பலஸ்தீன, எகிப்து, குவைத், ஓமான், ஈராக், லிபியா மற்றும் கட்டார் ஆகிய நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் இலங்கைக்கான தூதுவர்களே சந்திப்பில் பங்கேற்றிருந்தனர்.