கடந்த வருடத்தில் 51 ஆயிரத்து 659 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டிருந்தனர். நாட்டில் ஏற்பட்ட சீரற்ற காலநிலையுடன் டெங்கு நுளம்பு பெருக்கம் அதிகரித்ததால் இந்த ஆண்டு டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
கொழும்பு, கம்பஹா, களுத்துறை, யாழ்ப்பாணம் மற்றும் கண்டி மாவட்டங்களிலேயே அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். இந்நிலையில் டெங்கு நோய் தொடர்பில் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் செயற்பட வேண்டும் என சுகாதார அமைச்சின் டெங்கு நோய் தடுப்பு பிரிவு குறிப்பிட்டுள்ளது.
தரம் 5 புலமைபரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான உதவிதொகையை வங்கியில் வைப்பிலிட தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு கோட்டையில் இரந்து தலைமன்னமார் வரை செல்ல உள்ள தபால் புகையிரதத்தை மீண்டும் சேவையில் ஈடுப்படுத்த புகையிரத திணைக்களம் தீர்மானித்துள்ளது.
சாரதி அனுமதிப்பத்திரத்தை விநியோகிப்பதற்காக SMS தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதற்கு மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் தீர்மானித்துள்ளது.
தமிழகத்தின் பாம்பன் பகுதியில் இருந்து இலங்கை நோக்கி வருகைதந்தாக தெரிவிக்கப்படும் நான்கு அகதிகள் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக கடற்படை பேச்சாளர் லெப்டினட் கொமண்டர் இசுறு சூரியபண்டார தெரிவித்துள்ளார்.