உயர்தர பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்களை 6 மாத காலப்பகுதிக்குள் பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்குவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக உயர் கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுடன் கலந்துரையாடியுள்ளதாகவும் கூறியுள்ளார்.